செய்திகள் :

"குழந்தைகள் உடலில் சாத்தான்" - மகன்களை ஸ்கிப்பிங் கயிற்றால் அடித்த பாஸ்டர் தந்தை கைது; நடந்தது என்ன?

post image

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி(42).

இவர் அந்தப் பகுதியில் உள்ள ரசல்ராஜ் அடுக்குமாடிக்குடியிருப்பு ஒன்றில் தனது மனைவி சஜினி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகைக்குக் குடியிருந்து வருகிறார்.

கிறிஸ்தவ பாஸ்டரான கிங்ஸ்லி மனைவி சஜினியுடன் யோகோவா ஊழியத்திற்குச் செல்லும் போது 6-வயது மற்றும் 3-வயதுடைய இரு மகன்களை வீட்டில் அடைத்து விட்டு, 8-மாத பெண் கைக்குழந்தையுடன் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

வழக்கம்போல் வியாழக்கிழமை இரு மகன்களையும் வீட்டில் பூட்டி வைத்து விட்டு வெளியே சென்றார். மனைவியுடன் மாலை வீடு திரும்புகையில் இரு மகன்களும் வெளியே வந்து அடுக்குமாடிக்குடியிருப்பு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த பாதிரியார் கிங்ஸ்லி குழந்தைகளை வீட்டிற்குள் அழைத்துச் சென்று ஸ்கிப்பிங் கயிற்றால் அடித்துத் துன்புறுத்தியுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட பாஸ்டர் கிங்சிலி
கைதுசெய்யப்பட்ட பாஸ்டர் கிங்ஸ்லி

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுரேன் என்பவர் அங்குச் சென்று, என்ன பிரச்னை எனக் கேட்டுள்ளார்.

அவரை பாஸ்டர் கிங்ஸ்லி ஒருமையில் திட்டி அனுப்பியுள்ளார்.  இதனால் சந்தேகமடைந்த சுரேன் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் மற்றும் கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் வருவதற்குள் கிங்ஸ்லி வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். சுரேன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது கிங்ஸ்லியின் 8-மாத கைக்குழந்தை, 6-வயது மற்றும் 3-வயதான இரு மகன்கள் என மூன்று பேரும் உடல் முழுக்க இரத்த காயங்களுடன் அலறி துடித்தபடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் மூன்று குழந்தைகளையும் கருங்கல் போலீசார் மீட்டனர். கருங்கல் போலீசார் நடத்திய விசாரணையில், தனது குழந்தைகள் அடுக்குமாடிக்குடியிருப்பில் உள்ள பிற குழந்தைகளுடன் விளையாடியதால் பாஸ்டர் கிங்சிலிக்குக் கோபம் ஏற்பட்டது.

பாஸ்டர் தாக்கியதாம் காயம் அடைந்த குழந்தை
பாஸ்டர் தாக்கியதாம் காயம் அடைந்த குழந்தை

சாத்தான்களுடன் ஏன் விளையாடுகிறீர்கள் எனக் கேட்டதுடன், பிற குழந்தைகளுடன் விளையாடியதால் தனது குழந்தைகளின் உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாகக் கூறி, அவர்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து ஸ்கிப்பிங் கயிற்றால் அடித்துள்ளார்.

இனி சாத்தான்களுடன் விளையாடச் சென்றால் கொன்று விடுவேன் எனவும் பாஸ்டர் கிங்சிலி மிரட்டியதாகத் தெரிய வந்தது.

மூன்று குழந்தைகளையும் தாயுடன் சேர்த்து சிகிச்சைக்காக போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாஸ்டர் கிங்ஸ்லி மீது சிறார் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4-பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

``என் மகனை அடித்தால், நானும் உன் குழந்தைகளை அடிப்பேன்..'' - குழந்தைகளை அடித்து உதைத்த லிவ் இன் ஜோடி

கணவன் மனைவி இடையே சண்டை வந்தால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.மும்பை மலாடு பகுதியில் வசித்து வரும் ஷீலா, தனது கணவர் இறந்த பிறகு சஞ்சய் என்பவருடன் 2020-ம் ஆண்டில் இருந்து லிவ் இன் முறையில் வாழ... மேலும் பார்க்க

சென்னை: காதலியைக் கொன்ற காதலன் தற்கொலை; கணவன் மனைவி எனச் சொல்லித் தங்கியவர்களுக்கு என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (19). இவர் அரசுக் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிநயா (19). இவரும் ... மேலும் பார்க்க

டெல்லி: "மற்ற ஆண்களிடம் பேசாதே" - தோழியை எரித்த கொன்ற மாணவர்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

டெல்லி மெஹ்ரெளவி பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண், டெல்லி பல்கலைக்கழக திறந்த வெளி பள்ளியில் பி.காம் படித்து வந்தார். அவருக்கும் அர்ஷ்கிரித் சிங் (18) என்பவருக்கும் பார்ட்டி ஒன்றில் தொடர்பு ஏற்பட்டது.சிங... மேலும் பார்க்க

சிதம்பரம்: மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டிய அண்ணாமலை பல்கலை. பேராசிரியர் கைது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியில் 27 வயதுடைய மாணவி ஒருவர், 2018-ல் முதுநிலை வேளாண்மை படித்து வந்தார்.அப்போது அதே துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்த 55 வயத... மேலும் பார்க்க

’அடகு நகையை மீட்டு விற்றால் கூடுதல் பணம் கிடைக்கும்’ - ரூ.20 லட்சம் பணத்தை சுருட்டிய நால்வர்

தென்காசி மாவட்டம், வடகரை பகுதியைச் சேர்ந்தவர் ஜிந்தாமதார். நகைக்கடை நடத்தி வருகிறார். இவர், இலத்தூர் காவல் நிலையத்தில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு நகை வாங்கித் தருவது போல் நடித்து தன்னுடைய பணம் ரூ.... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: காதலியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் - ஆத்திரத்தில் சரமாரியாக குத்தி கொன்ற காதலன்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பொன்மலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். முதல் பெண் (வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூ... மேலும் பார்க்க