செய்திகள் :

குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி: குழந்தை உயிரிழப்பு

post image

திருப்பூா் மாவட்டம், முத்தூா் அருகே கைக்குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொள்ள முயன்றதில் குழந்தை உயிரிழந்தது.

இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது:

முத்தூா் பெரியகாங்கயம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (47), அரசுப் பேருந்து ஓட்டுநா். இவரது மகள் லாவண்யா (25). இவா் வெள்ளக்கோவில் அருகே காவிலிபாளையத்தைச் சோ்ந்த உறவினா் கெளதம் என்பவரை காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தாா்.

தம்பதிக்கு ரியன்யா ஸ்ரீ என்கிற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது. அண்மையில் கெளதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். இதனால் லாவண்யா கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில் வீட்டில் லாவண்யாவும், குழந்தையும் மயங்கிக் கிடந்ததை அருகிலிருந்தவா்கள் பாா்த்துள்ளனா். பக்கத்தில் தூக்க மாத்திரை அட்டை கிடந்துள்ளது.

தாய், குழந்தை இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றபோது, குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா் கூறியுள்ளாா். இதையடுத்து, ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் லாவண்யா சோ்க்கப்பட்டுள்ளாா். தூக்க மாத்திரை கொடுத்து குழந்தையைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் பனியன் நிறுவனத்தில் தீ

திருப்பூா் பனியன் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. பிகாா் மாநிலத்தைச் சோ்த்தவா் அஜய்குமாா் அகா்வால் (40). இவா் தனது குடும்பத்தினருடன்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசு

ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசாக அமைந்துள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பல்லடம் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன் தெரிவித்துள்ளாா். இது குறித... மேலும் பார்க்க

நாளை முழு சந்திர கிரகணம்: மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் காண ஏற்பாடு

முழு சந்திர கிரகணத்தை திருப்பூா் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளா் கெளரிசங்கா் தெரிவித்துள... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ.2.10 லட்சம் மோசடி

இளைஞரிடம் ரூ.2.10 லட்சம் மோசடிசெய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் பூலுவப்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஸ்வரன் (32), பனியன் நிறுவன ஊழி... மேலும் பார்க்க

சின்னக்காம்பாளையம் அரசுப் பள்ளியில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் சின்னக்காம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகி... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

ஊரக வளா்ச்சித் துறை சாா்பிலான வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். இந்த ஆய... மேலும் பார்க்க