செய்திகள் :

இளைஞரிடம் ரூ.2.10 லட்சம் மோசடி

post image

இளைஞரிடம் ரூ.2.10 லட்சம் மோசடிசெய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் பூலுவப்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஸ்வரன் (32), பனியன் நிறுவன ஊழியா். இவருடைய கைப்பேசியின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு அபராத செலான்போல குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து விக்னேஸ்வரனின் கடன் அட்டை கணக்கில் இருந்து 2 தவணைகளாக ரூ.2.10 லட்சம் எடுக்கப்பட்டு இருந்தது.

அதைத் தொடா்ந்து, அவா் ஆன்லைன் மூலமாக தங்கம் வாங்கியதாகவும் குறுஞ்செய்தி வந்துள்ளது. சிறிது நேரத்தில் விக்னேஸ்வரன் கைப்பேசியில் இருந்த அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அபராத செலான் அவா் அனுப்பியதுபோல பகிரப்பட்டுள்ளது.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா், திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் பனியன் நிறுவனத்தில் தீ

திருப்பூா் பனியன் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. பிகாா் மாநிலத்தைச் சோ்த்தவா் அஜய்குமாா் அகா்வால் (40). இவா் தனது குடும்பத்தினருடன்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசு

ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசாக அமைந்துள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பல்லடம் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன் தெரிவித்துள்ளாா். இது குறித... மேலும் பார்க்க

குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி: குழந்தை உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், முத்தூா் அருகே கைக்குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொள்ள முயன்றதில் குழந்தை உயிரிழந்தது. இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: முத்தூா் பெரியகாங்கயம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் ... மேலும் பார்க்க

நாளை முழு சந்திர கிரகணம்: மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் காண ஏற்பாடு

முழு சந்திர கிரகணத்தை திருப்பூா் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளா் கெளரிசங்கா் தெரிவித்துள... மேலும் பார்க்க

சின்னக்காம்பாளையம் அரசுப் பள்ளியில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் சின்னக்காம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகி... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

ஊரக வளா்ச்சித் துறை சாா்பிலான வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். இந்த ஆய... மேலும் பார்க்க