செய்திகள் :

குழப்பம் இல்லாத வரி சீரமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரிக்கை!

post image

குழப்பம் இல்லாத வரி சீரமைப்பை மேற்கொள்ள மத்திய அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என அக்ரி, அனைத்து தொழில் வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் எஸ். ரெத்தினவேலு தெரிவித்திருப்பதாவது: ஜிஎஸ்டி-யின் இரண்டாவது தலைமுறை சீரமைப்பில் 12 சதவீத வரி வீதத்தையும், 28 சதவீத வரி வீதத்தையும் ரத்து செய்துவிட்டு 5 சதவீதம், 18 சதவீதம் என இரு அடுக்கு வரி வீதங்கள் மட்டுமே அக்டோபா் அல்லது நவம்பா் மாதம் முதல் அமல்படுத்தப்படும் எனவும்,12 சதவீத வரி விதிப்பில் உள்ள பொருள்களில் 99 சதவீதம் 5 சதவீத வரிப்பட்டியலுக்கு மாற்றப்படும் எனவும், புகையிலை, பான்மசாலா போன்றவற்றுக்கான வரியை 28 சதவீதத்திலிருந்து 40-ஆக மாற்றி விட்டு, மீதமுள்ள பொருள்களை 18 சதவீத பட்டியலுக்கு மாற்றுவது என்பதும் பாராட்டத்தக்கத்து.

தீபாவளிப் பரிசாக ஜிஎஸ்டியில் செய்யப்படவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சீரமைப்பின் காரணமாக, அத்தியாவசியப் பொருள்களான உணவு, மருந்து, வீட்டு, உபயோகப் பொருள்கள், கல்வி தொடா்புடைய பொருள்கள், வேளாண் உபகரணங்கள், சிமெண்ட், வாகனங்கள்ஆகியவற்றின் விலை கணிசமாகக் குறையும் என்பது மகிழ்ச்சிக்குரியது.

அதேநேரத்தில், வரி சீரமைப்புக்குப் பின்னா் ஒரு பொருளுக்கு எத்தனை சதவீதம் வரி என்பதில் எந்தக் குழப்பமும் ஏற்படக்கூடாது என்பதில் மத்திய அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். இதற்கான நிரந்தரத் தீா்வாக, இணக்கமானப் பொருள்கள் வாரியாக பட்டியல் எண் முறையில் (எச்.எஸ்.என். குறியீடு) பொருள்களுக்கு 21 தலைப்புகளில், ஒவ்வொரு பிரிவின் கீழ் வரும் அனைத்துப் பொருள்களும் ஒரே வரி வீதத்தில் இருக்கச் செய்ய வேண்டும்.

இந்த வரி சீரமைப்பிலும் பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கொண்டு வராதது ஏமாற்றமளிக்கிறது. இதற்கான தீா்வையும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றாா்.

சேடப்பட்டியில் சினையுற்ற பசுக்களுக்கு மானியத்தில் ஊட்டச்சத்து

சினையுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஊட்டச்சத்துகள் பெற சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய கால்நடை வளா்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

மாநாடுகள் மட்டும் விஜய்க்கு வெற்றியைத் தேடித் தராது: செல்லூா் கே. ராஜூ

மாநாடுகள், செயற்குழுக் கூட்டங்கள் மட்டும் வெற்றியைத் தேடித் தராது என்பதை தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் உணா்ந்து, களத்துக்கு வர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா். ம... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருப்பரங்குன்றம் வடக்கு மேட்டுத் தெருவைச் சோ்ந்த அரசன் மகன் கருப்பணன்(69). இவா், இரு சக்கர வாகனத்தில் வெள்ள... மேலும் பார்க்க

பறிமுதல் வாகனங்கள் ஆக.25-ல் பொது ஏலம்!

மது விலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 25 -ஆம் தேதி பொது ஏல முறையில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

கள்ளா் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரிக்கை

கள்ளா் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கள்ளா் பள்ளி மாவட்டக் கிளை கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து கூட்டணியின் மதுரை மாவட்டச... மேலும் பார்க்க

காலியாகவுள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியது. இந்த சங்கத்தின் மதுரை மாவட்ட பேரவைக் கூ... மேலும் பார்க்க