குழித்துறை அருகே சிமென்ட் கல் தொழிற்சாலைக்கு சீல்
குழித்துறை அருகே பொதுமக்களுக்கு இடையூறாகவும், உரிய அனுமதி பெறாமலும் செயல்பட்டு வந்த சிமென்ட் கல் தயாரிக்கும் தொழிற்சாலையை நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
குழித்துறை அருகே படப்பரை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், நகராட்சியின் தொழில் உரிமம் பெறாமலும் குடியிருப்பு பகுதியில் சிமென்ட் கல் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், குழித்துறை நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள் தொழிற்சாலையை பூட்டி சீல் வைத்தனா்.