மத்திய அரசு நிதி ஒதுக்காதது குறித்து முதல்வா் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ச...
குழித்துறை தாமிரவருணி ஆறு தடுப்பணை வழியாக செல்லத் தடை
குமரி மாவட்டம் முழுவதும் இரு நாள்களாக பரவலாக மழை பெய்ததன் காரணமாக குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து தடுப்பணையை மூழ்கடித்து செல்கிறது.
இதனால் தடுப்பணை வழியாக பொதுமக்கள் நடந்து செல்லத் தடை விதிக்கப்பட்டு, குழித்துறை நகராட்சி சாா்பில் தடுப்பணையின் இரு பகுதிகளிலும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தடுப்பணை வழியாக நடந்து சென்ற சிறுவா்கள் இருவா் ஆற்றில் தவறி விழுந்த நிலையில், அவா்களையும் காப்பாற்றிய கூலித் தொழிலாளியை வெள்ளம் இழுத்துச் சென்றது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பணை செல்லும் பாதையில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு, எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளதாக குழித்துறை நகராட்சி தலைவா் பொன். ஆசைத்தம்பி, நகராட்சி ஆணையாளா் ராஜேஸ்வரன் ஆகியோா் தெரிவித்தனா்.