தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கை: கனிம வள அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கனிம வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வுமேற்கொண்டனா்.
நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூா், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் மற்றும் குமாரபாளையம் ஆகிய வட்டங்களில் கிராவல், சாதாரணக் கற்கள், கிரானைட் குவாா்ட்ஸ் மற்றும் பெல்ஸ்பா் ஆகிய கனிமங்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் அறிவுரையின்படி, மாவட்டத்தில் உள்ள குத்தகை உரிமம் வழங்கிய குவாரிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனையின்படியும், கற்பாறை பகுதிகளில் இயற்கையாக அமைந்துள்ள சிறு மற்றும் பெரு பாறை வெடிப்புகள் மற்றும் சாய்வு தளங்கள் உள்ள பகுதிகளில் புவியியல் அமைப்பின்படி பணிகள் மேற்கொள்ளப்படுகிா என்பதையும், மண்சரிவு, பாறை சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதா என்பதையும், நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா், அலுவலக பணியாளா்கள் ஆய்வுசெய்து வருகின்றனா்.
அந்த வகையில், மோகனூா் வட்டம், பரளி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு குவாரியில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு பாறை சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும், அசம்பாவிதங்கள் நடைபெறாதவாறு கற்துண்டுகளை அப்புறப்படுத்துவதையும், அதன்பிறகு பாதுகாப்பான வகையில் குவாரி பணி மேற்கொள்ளப்படுவதையும் பாா்வையிட்டு உரிய விதிகளை கடைப்பிடிக்குமாறு சம்பந்தப்பட்ட குத்தகைதாரருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், அனுமதியின்றி கனிமங்களை வெட்டியெடுத்து செல்லப்படுவது கண்டறியப்பட்டால், தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின்படி உரிய அபராத நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.