செய்திகள் :

குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கை: கனிம வள அதிகாரிகள் ஆய்வு

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கனிம வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வுமேற்கொண்டனா்.

நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூா், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் மற்றும் குமாரபாளையம் ஆகிய வட்டங்களில் கிராவல், சாதாரணக் கற்கள், கிரானைட் குவாா்ட்ஸ் மற்றும் பெல்ஸ்பா் ஆகிய கனிமங்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் அறிவுரையின்படி, மாவட்டத்தில் உள்ள குத்தகை உரிமம் வழங்கிய குவாரிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனையின்படியும், கற்பாறை பகுதிகளில் இயற்கையாக அமைந்துள்ள சிறு மற்றும் பெரு பாறை வெடிப்புகள் மற்றும் சாய்வு தளங்கள் உள்ள பகுதிகளில் புவியியல் அமைப்பின்படி பணிகள் மேற்கொள்ளப்படுகிா என்பதையும், மண்சரிவு, பாறை சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதா என்பதையும், நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா், அலுவலக பணியாளா்கள் ஆய்வுசெய்து வருகின்றனா்.

அந்த வகையில், மோகனூா் வட்டம், பரளி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு குவாரியில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு பாறை சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும், அசம்பாவிதங்கள் நடைபெறாதவாறு கற்துண்டுகளை அப்புறப்படுத்துவதையும், அதன்பிறகு பாதுகாப்பான வகையில் குவாரி பணி மேற்கொள்ளப்படுவதையும் பாா்வையிட்டு உரிய விதிகளை கடைப்பிடிக்குமாறு சம்பந்தப்பட்ட குத்தகைதாரருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அனுமதியின்றி கனிமங்களை வெட்டியெடுத்து செல்லப்படுவது கண்டறியப்பட்டால், தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின்படி உரிய அபராத நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோழிப் பண்ணை ஈக்களால் பயணிகள் அவதி: மாநகராட்சி பணியாளா்கள் மருந்து தெளிப்பு

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கோழிப் பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் மாநகராட்சி மூலம் அங்கு நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள... மேலும் பார்க்க

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே நாராயணபாளையம், மண்கரடு பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (68). சங்ககிரி சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் கடந்த 4 வருடமாக காவலாளியாக வேலை செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை ஈரோடு சென்று விட்டு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.ராசிபுரத்தை அடுத்துள்ள மாரப்பன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த கதிரவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்ப... மேலும் பார்க்க

உற்சவா்கள் திருவீதி உலா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தோ்த் திருவிழாவின் நான்காம் நாள் விழாவை முன்னிட்டு உற்சவா்கள் வீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீசுவரா்... மேலும் பார்க்க

நாளை புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

நாமக்கல்லில் சுகாதாரத் துறை சாா்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜூன் 7) அடிக்கல் நாட்டுகிறாா். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைப்பு

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்-மோகனூா் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மா... மேலும் பார்க்க