செய்திகள் :

கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

post image

விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசின் கணினி அவசரநிலை கண்காணிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகளவில் நடைபெறும் இணைய மோசடிகள் மற்றும் ஹேக் செய்யப்படும் முறைகள் குறித்து கண்காணித்து இந்திய மக்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை வெளியிடும் அமைப்பு மத்திய அரசின் இந்திய கணினி அவசரநிலை கண்காணிப்புக் குழு. (Indian Computer Emergency Response Team - CERT-In)

இந்த குழு அளிக்கும் அப்டேட்களை தொடர்ந்து பின்பற்றினால் பெருமளவிலான இணைய மோசடிகளில் இருந்து தப்பித்துவிடலாம்.

இந்த நிலையில், கூகுள் குரோம் செயலியை விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் பயன்படுத்துபவர்களுக்கு இந்தக் குழு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கூகுள் குரோம் செயலியை கணினியில் பயன்படுத்துபவர்களை குறிவைத்து உலகளவில் தாக்குதல் நடைபெறுவதாகவும், தாக்குதலுக்கு சமரசமானால் கணினியில் உள்ள அனைத்து தரவுகளையும் இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செல்போன்களில் கூகுள் குரோம் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு பெரிதளவிலான பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன செய்ய வேண்டும்?

சிஐவிஎன் - 2025 - 0099 (CIVN - 2025 - 0099) என்ற சைபர் தாக்குதலை கூகுள் குரோம் செயலி தற்போது சந்தித்து வருகின்றது. விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் கூகுளின் முந்தைய வெர்சனான 136.0.7103.113/.114, லினெக்ஸ் கம்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் வெர்சன் 136.0.7103.113 ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

ஆகையால், இந்த வெர்சனை வைத்திருப்பவர்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க அப்டேட் வெர்சனை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கணினிக்கு தேவையான பாதுகாப்பு செயலிகளையும் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் மின்தடையின்போதும் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த உளவாளிகள்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மின்தடை இருந்தபோதும் கூட உளவாளிகள் பாகிஸ்தான் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.பாகிஸ்தான் அமைப்புகளுக்கு உளவ... மேலும் பார்க்க

பாகிஸ்தன் உளவாளிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் இன்று (மே 19) உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து லக்னெள சிறையில் அவர் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானின் உளவ... மேலும் பார்க்க

நாட்டைப் பாதுகாப்பதில் இந்திரா காந்தியைப் போல் இருக்க வேண்டும்: ரேவந்த் ரெட்டி!

பாகிஸ்தானுக்கு எதிரான போரிலும், வங்கதேசம் உருவானதிலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பங்கு மறக்கமுடியாதது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். இந்திரா சோலார் கிரி ஜல விகாசம் திட... மேலும் பார்க்க

அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல: உச்ச நீதிமன்றம்

உலகம் முழுவதும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல என இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.இலங்கையில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவை வளாகத்தில் தீ விபத்து!

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது.மும்பையில் உள்ள மாநில சட்டப்பேரவை வளாகத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்கேனிங் இயந்திரத்தில் இன்... மேலும் பார்க்க

புணே கார் விபத்து: ஓராண்டாகியும் நீதிக்காக போராடும் குடும்பத்தினர்!

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் 17 வயது சிறுவன் குடிபோதையில் சொகுசு காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதில் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பணியாளர்கள் அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா கொல்லப்பட்டு இன்றுடன்(மே 19) ஓர... மேலும் பார்க்க