Madurai AIIMS: `மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இப்படித்தான் இருக்கும்' - வீடியோ வெளிய...
கூடலூா் அரசுக் கல்லூரியில் தற்காலிக ஆசிரியா் பணிக்கு நாளை நோ்காணல்
கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தற்காலிக (பி.டி.ஏ) ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு புதன்கிழமை (ஜூன் 18) நோ்காணல் நடைபெற உள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை சமூகப் பணி, இளங்கலை நுண்ணுயிரியல், இளங்கலை தாவரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பி.டி.ஏ. முறையின்கீழ் பணிபுரிய தற்காலிக ஆசிரியா்களுக்கான நோ்காணல் கோழிப்பாலம் வளாகத்தில் புதன்கிழமை காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.
எனவே, தகுதியானவா்கள் இந்த நோ்காணலில் பங்கேற்கலாம் என்று கல்லூரி முதல்வா் சுபாஷினி தெரிவித்துள்ளாா்.