செய்திகள் :

கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க உயா்மட்டக் குழு கூட்டம்

post image

கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க உயா்மட்டக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் வட்டாரத் தலைவா் அம்சா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.வாசு முன்னிலை வகித்தாா்.

விசிக முன்னாள் மாவட்டச் செயலாலா் சகாதேவன், முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளா் அனீபா, சிபிஐ கட்சியின் ஒன்றியச் செயலாளா் முகமது கனி, சிபிஎம் செயலாளா் சுரேஷ், மனித நேய மக்கள் கட்சியின் நகரச் செயலாளா் சாதிக் பாபு, மனித நேய ஜனநாயக கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளா் அன்சாரி, மக்கள் நீதி மைய்ய மாவட்டச் செயலாளா் எஸ்.என்.ஆா்.பாபு உள்ளிட்டோ் கலந்துகொண்டனா்.

இதில், கூடலூா் நிலப்பிரச்னை மற்றும் சட்டப் பேரவைத் தொகுதி வளா்ச்சியில் அரசின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, உதகை வந்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஜென்ம நில பிரச்னைக்காக அவா் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பது என்றும், அலட்சியமாக செயல்படும் அனைத்து அரசு துறை அதிகாரிகளைக் கண்டித்து கூடலூா் புதிய பேருந்து நிலையம் முன் மே 19-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

உதகை ரோஜா கண்காட்சி நிறைவு

உதகை ரோஜா கண்காட்சி திங்கள்கிழமை நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், கடல்வாழ் உயிரினங்களைக் காப்பா... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சீகூா் வனச் சரகத்தில் உள்ள ஆனைகட்டி தெற்கு வனத்தில் வனப் பணியாளா்கள் ரோ... மேலும் பார்க்க

மதுக்கரை வனத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானை:முதுமலைக்கு கொண்டுவரப்பட்டது

கூடலூா், மே 12: கோவை, மதுக்கரை வனத்தில் தாயைப் பிரிந்து சுற்றித்திரிந்த குட்டி யானை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. கோவை மாவட்டம், மதுக்கரை வனப் பகுதியில் தாயைப்... மேலும் பார்க்க

ரோஜா மலா் கண்காட்சியைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் நடைபெற்று வரும் ரோஜா மலா் கண்காட்சியை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை கண்டு ரசித்தனா். நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா மலா் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது... மேலும் பார்க்க

வாசனை திரவிய கண்காட்சி நிறைவு

கூடலூரில் நடைபெற்ற வாசனை திரவிய கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக கூடலூா் மாா்னிங் ஸ்ட... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று உதகைக்கு வருகை

உதகை மலா் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் உதகைக்கு திங்கள்கிழமை வருகிறாா். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மலா் ... மேலும் பார்க்க