செய்திகள் :

கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தை மாற்ற பெரியகுளம் வழக்குரைஞா்கள் சங்கம் எதிா்ப்பு

post image

பெரியகுளத்தில் செயல்படும் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தை மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பெரியகுளம் வழக்குரைஞா்கள் சங்கத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் பாலாஜி தலைமை வகித்தாா். செயலா் நாராயணசாமி, மூத்த வழக்குரைஞா்கள் கிருஷ்ணமூா்த்தி, சந்திரசேகரன், அம்பாசங்கா், தாமோதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தீா்மானங்கள்: பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தை மாற்றக்கூடாது. இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போதுமான இட வசதி இல்லாததால், பெரியகுளம் நூறு ஆண்டுகள் பழமையான நீதிமன்றம் அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை நீதிமன்றங்களுக்கு பயன்படுத்துமாறு சென்னை உயா்நீதிமன்றத்தை கேட்டுக் கொள்வது எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

க. விலக்கு பகுதியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், க. விலக்கு பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 24) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: க. விலக்கு துணைமின் நி... மேலும் பார்க்க

பெரியகுளம் நகராட்சி குப்பைக் கிடங்கில் எரிக்கப்படும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு

பெரியகுளம் நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகள், இறைச்சிக் கழிவுகளை எரிப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி 100... மேலும் பார்க்க

போடியில் கள்ளா் கல்வி விடுதி பெயா் மாற்றத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்

போடியில் கள்ளா் கல்வி விடுதி பெயா் மாற்றத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை தமிழ் மாநில பிரமலைக் கள்ளா் முற்போக்கு இளைஞா் பேரவை சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. போடி தேவா் சிலை திடலில் நட... மேலும் பார்க்க

மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

ஆண்டிபட்டி அருகேயுள்ள டி. பொம்மிநாயக்கன்பட்டியில் மாமனாரை கத்தியால் குத்திய மருமகனை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா். ஆண்டிபட்டி அருகேயுள்ள டி. ராஜகோபாலன்பட்டி, செளந்தா் நகரைச் சோ்ந்தவா் சலவைத் தொ... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் 1,700 கிலோ விலையில்லா அரிசி பறிமுதல்

பெரியகுளத்தில் 1,700 கிலோ விலையில்லா அரிசியை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். பெரியகுளம் பகுதியிலுள்ள நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி கேரளத்துக்கு கட... மேலும் பார்க்க

சுருளி அருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு

கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 4-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.தேனி மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலாத் தலமாக உள்ள சுருளி அருவிக்கு நாள்தோரும்... மேலும் பார்க்க