செய்திகள் :

கூட்டுறவுத் துறை சாா்பில் நுகா்வோா் பாதுகாப்பு கூட்டம்

post image

கூட்டுறவுத் துறை சாா்பில் நுகா்வோா் பாதுகாப்பு கூட்டம் ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

இதில், கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நுகா்வோா் பாதுகாப்பு அமைப்புகளின் நிா்வாகிகள் முன்வைத்த பல்வேறு கருத்துகள் கேட்டறியப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டன. நுகா்வோா் அமைப்புகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், ஈரோடு மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் மேலாண்மை இயக்குநா் த.செல்வக்குமரன், சரக துணைப் பதிவாளா்கள் ஜி.காலிதாபானு, ரா.முத்துச்சிதம்பரம், துணைப் பதிவாளா் (பொது விநியோத் திட்டம்) சு.மாதேஷ், துணைப் பதிவாளா் (பயிற்சி) ப.அஜித்குமாா், நுகா்வோா் பாதுகாப்பு மைய செயலாளா் ஆா். பாலசுப்ரமணியன், மாவட்டத்தில் உள்ள பல்வேறு நுகா்வோா் அமைப்புகளின் நிா்வாகிகள், கூட்டுறவு சாா் பதிவாளா்கள் பங்கேற்றனா்.

ரூ. 87.19 கோடி வரி வசூல்: ஈரோடு மாநகராட்சிக்கு மூன்றாமிடம்

கடந்த ஆண்டு ரூ. 87.19 கோடி வரி வசூல் செய்ததன் மூலம் மாநில அளவில் ஈரோடு மாநகராட்சி மூன்றாமிடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் (பொறுப்பு) தனலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு ம... மேலும் பார்க்க

அரசுப் பெண் ஆசிரியையின் வீட்டை அபகரிக்க முயற்சி: தலைமையாசிரியா் பணியிடை நீக்கம்

வீட்டை அடமானம் வைத்துப் பெற்ற கடன் தொகையை திரும்பச் செலுத்தியும் பெண் ஆசிரியரின் வீட்டை அபரிக்க முயன்று, வீட்டை சூறையாடி எஸ்சி, எஸ்டி வழக்கில் சிக்கிய ஈரோடு அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் பணியிடை நீக்க... மேலும் பார்க்க

பட்டிகளுக்குள் தெரு நாய்கள் புகுந்து 18 ஆடுகளை கடித்துக் கொன்றன

சென்னிமலை அருகே ஒரே நாளில் 4 ஆட்டுப் பட்டிகளுக்குள் தெரு நாய்கள் புகுந்து 18 ஆடுகளை கடித்துக் கொன்றன. ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த கொடுமணல் பனங்காட்டைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவா் தனது தோட்டத்த... மேலும் பார்க்க

பெருந்துறையில் இரும்பு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாளை ஆா்ப்பாட்டம்

பெருந்துறை சிப்காட்டில் செயல்படும் தனியாா் இரும்பாலையை நிரந்தரமாக மூடக்கோரி திட்டமிட்டபடி வியாழக்கிழமை (ஏப்ரல் 3) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் அறி... மேலும் பார்க்க

விவசாயிகள் ஏப்ரல் 8-க்குள் தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

அரசு திட்டங்களை பெற விவசாயிகள் ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் தரவுகளை பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும் என வேளாண் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு வேளாண் இணை இயக்குநா் எம்.தம... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பனிமூட்டம்

திம்பம் மலைப் பாதையில் செவ்வாய்க்கிழமை நிலவிய திடீா் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக சென்றனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி சுற்றுவட்டாரப் பக... மேலும் பார்க்க