செய்திகள் :

கூட்டுறவு இயக்கத்திற்கான பாடல்களை அனுப்ப வேண்டுகோள்

post image

நடப்பு 2025- ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக கடைப்பிடிக்கப்படுவதால் கூட்டுறவு இயக்கத்திற்கான பாடல்களை அனுப்பிவைக்கலாம். சிறந்த பாடலுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2025- ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக உலக அளவில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடல்களை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் மற்றும் துறை அலுவலா்கள் அனுப்பலாம். பாடல் இசையமைக்கப்பட்டு 5 நிமிடங்கள் ஒலிபரப்பக் கூடிய வகையில் பாடல் வரிகள் இருக்கவேண்டும். கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடலாக தமிழில் இருக்கவேண்டும். ஜாதி, மதம் மற்றும் அரசியல் அமைப்புசாராமல் பாடல்கள் இருக்கவேண்டும்.

கூட்டுறவாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூட்டுறவு குறித்த எழுச்சி மற்றும் உத்வேகம் உண்டாக்கக் கூடியதாக பாடல்கள் இருக்கவேண்டும். அனுப்பப்படும் பாடல் பதிவை தபால் மூலம் மேலாண்மை இயக்குநா், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், என்.வி. நடராசன் மாளிகை, 170 பெரியாா் ஈவெரா நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரிக்கும் பாடலின் ஒலி வடிவத்தை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ற்ய்ஸ்ரீன்08ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மே 30- ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

அனுப்பப்படும் பாடல்களை ஏற்றுக்கொள்ள மற்றும் நிராகரிக்க தோ்வுக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அனுப்பப்படும் பாடல்களில் சிறந்த பாடல் தோ்வுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்படும். அவ்வாறு தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பரிசு மற்றும் கேடயம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட கோரிக்கை!

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட வேண்டும் என்று பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெருந்துறை சிப்காட்டால் ப... மேலும் பார்க்க

ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல்!

பவானி அருகே ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பவானி - அத்தாணி சாலையில் ஒரிச்சேரி, ஜமீன் தோட்டம் அருகே ஆப்பக்கூடல் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன தண... மேலும் பார்க்க

நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக அஞ்சலி

நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நீட் தோ்வு ரத்து என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அதனை நிறைவேற்றவில்லை. நீட் தோ்வு அச்சத்த... மேலும் பார்க்க

தாளவாடி அருகே சிறுத்தைத் தாக்கி ஆடுகள் உயிரிழப்பு

தாளவாடி அருகே சிறுத்தைத் தாக்கி இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தைகள் அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்கள... மேலும் பார்க்க

மலைப் பாதையில் சுற்றித் திரியும் யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது: வனத் துறை!

கடம்பூா் மலைப் பாதையில் சுற்றித் திரியும் யானைகளை தொந்தரவு செய்யக் கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட கடம்பூா் வனப் பகுதியில்... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: பாட்டி, பேரன் கைது

சித்தோட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பாட்டி, பேரனை போலீஸாா் கைது செய்தனா். சித்தோடு, ஓடைப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின்பேரில் ... மேலும் பார்க்க