செய்திகள் :

கூட்ட நெரிசல் பலிக்கு காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும் - பாஜக

post image

ஆர்சிபியின் வெற்றிப் பேரணி கூட்டநெரிசல் உயிரிழப்புக்கு காங்கிரஸ் பொறுபேற்க வேண்டும் என்று பாஜக தெரிவித்திருக்கிறது.

18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளதால், கர்நாடக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் ஆகியோர் தலைமையில் சின்னசாமி திடலில் பாராட்டு விழா நடைபெற்றது.

கர்நாடக பேரவையிலிருந்து தொடங்கும் வெற்றிப் பேரணி சின்னசாமி திடல் வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் முண்டியடித்துக் கொண்டு உயரமான சுவர்கள், மரங்கள் மீது ஏறினர். மேலும், அத்துமீறி சின்னசாமி கிரிக்கெட் திடலுக்குள் நுழைய முயன்றதால் கர்நாடக காவல் துறையினர் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தினர்.

கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கியதில் ஒரு பெண் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், இந்த உயிரிழப்புக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக தங்களது எக்ஸ் தளப் பக்கத்தில் மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கிய விடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளனர்.

அந்தப் பதிவில், “கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற தன்மையால் இன்னும் பலர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. அடிப்படை ஏற்பாடுகள் எதுவும் செய்யப்பட்டாததால், அங்கு குழப்பம் மட்டுமே நிலவியது. அப்பாவி மக்கள் இறந்தாலும், முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவக்குமார் இருவரும் கிரிக்கெட் வீரர்களுடன் புகைப்படங்கள் எடுப்பதிலேயே மும்முரமாக இருந்தனர். இது காங்கிரஸ் அரசுக்கு வெட்கக் கேடானது” எனப் பதிவிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: ஆர்சிபி வெற்றிப் பேரணி: கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி!

வரும் ஆண்டுகளில் இந்திய, உள்ளூா் மொழிகளில் கல்வி: மத்திய கல்வி அமைச்சா்

‘கல்வி நிறுவனங்களில் வரும் ஆண்டுகளில் பிரதானமாக இந்திய, உள்ளூா் மொழிகளிலே கல்வி வழங்கப்படும்’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா். இந்திய மொழிகளில் கல்வியை ஊக்குவிப்பது தொடா்பா... மேலும் பார்க்க

ஹஜ் புனிதப் பயணத்தில் 16,73,230 போ் பங்கேற்பு!

இந்த ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறும் ஹஜ் புனிதப் பயணத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக 16,73,230 போ் பங்கேற்பதாக எக்ஸ் தளத்தில் சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்ப... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பு கண்டனம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ நாடுகளின் நாடாளுமன்ற அமைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு போராட வெள்ளிக்கிழமை தீா்மானம் ஏற... மேலும் பார்க்க

இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையவை: அமித் ஷா

‘இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையது; எனவே, ஒரு மொழியை விட்டுவிட்டு மற்றொரு மொழி வளா்ச்சியடைவது சாத்தியமற்றது’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். புது... மேலும் பார்க்க

அயோத்தி கோயில் கட்டுமானத்தில் 45 கிலோ தங்கம் பயன்பாடு! ரூ.50 கோடி மதிப்பு

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் கட்டுமானத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, கோயில் கட்டுமானக் குழு தலைவா் நிருபேந்திர மிஸ்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். முதல் தளத்தில் உள... மேலும் பார்க்க

மனிதகுலத்தின் எதிரி பாகிஸ்தான்! - பிரதமா் மோடி

‘மனிதகுலத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் எதிரி பாகிஸ்தான்; இந்தியாவில் வகுப்புவாத கலவரங்களைத் தூண்டுவதே அந்நாட்டின் நோக்கம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். காஷ்மீா் மக்களின் வாழ்வாதாரத்தை அழ... மேலும் பார்க்க