செய்திகள் :

கூலித்தொழிலாளிக்கு உடனடி பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

post image

முதல்வர் ஸ்டாலின் வேலூர் சுற்றுப் பயணத்தின்போது, வேலை வேண்டி மனு அளித்த  கூலித் தொழிலாளி பொற்செல்விக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தில் விடுதிக் காவலராக நியமனம் செய்து, அதற்கான பணி  நியமன ஆணையினை இன்று (ஜூன் 25) வழங்கினார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அப்போது, காட்பாடி வட்டம் சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொற்செல்வி என்பவர் முதல்வரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் ஆதரவற்ற நிலையில் வறுமை சூழ்நிலையில் வாழ்வதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

முதல்வர் ஸ்டாலினிடம் பொற்செல்வி  வழங்கிய கோரிக்கை மனுவில் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், தன்னுடைய மாமனார் ஒரு மாற்றுத்திறனாளி என்பதாலும் அவர்கள் அனைவரையும், தான் கூலி வேலை செய்து காப்பாற்றி வருவதாகவும் தெரிவித்து தனக்கு ஏதேனும் ஒரு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று  கோரி இன்று காலை விண்ணப்பம் மனு அளித்தார்.

பொற்செல்வியின் ஏழ்மை நிலையை பரிவோடு கருதி, அவரது மனுவை உடனடியாக ஏற்றுக்கொண்டு, முதல்வர் பொற்செல்விக்கு ரூபாய் 17,000 மாத சம்பளத்தில் காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தின்  விடுதி காவலருக்கான பணி நியமன ஆணையை அவரிடம் வழங்கினார்.

முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்த சில மணி நேரங்களில், பணி நியமன ஆணை கிடைத்ததால், அதனை பெற்றுக் கொண்ட பொற்செல்வி அளவில்லாத  மகிழ்ச்சியோடு, முதல்வர் ஸ்டாலினை வணங்கி நன்றி தெரிவித்தார். 

இதையும் படிக்க: 2026 முதல் 10ம் வகுப்புக்கு இரண்டு பொதுத் தேர்வுகள்: சிபிஎஸ்இ

தமிழகம் முழுவதும் நாளைமுதல் திமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி

வாக்குச் சாவடி வாரியாக உறுப்பினா்களைச் சோ்ப்பது தொடா்பாக, திமுகவின் வாக்குச் சாவடி முகவா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனை அமைச்சரும், தகவல் தொழில்நுட்ப அணியின் செயலருமான டிஆா்பி ராஜ... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா் பணிக்கு 2,346 போ் தோ்வு: குற்ற வழக்குகள் நிலுவை குறித்து விசாரிக்க கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 2,346 போ் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 இடங்களில் புற்றுநோய் பரவலைக் கண்டறியும் பெட் ஸ்கேன் மையங்கள்!

தமிழகத்தில் சென்னை கிண்டி கலைஞா் நூற்றாண்டு மருத்துவமனை உள்பட நான்கு இடங்களில் புற்றுநோய் பரவலைக் கண்டறியும் பெட் ஸ்கேன் கட்டமைப்பை நிறுவுவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு மருத்துவ... மேலும் பார்க்க

பெண்ணுக்கு இரட்டை கருப்பை பாதிப்பு: லேப்ரோஸ்கோபி சிகிச்சையில் அகற்றம்

பெண் ஒருவருக்கு இருந்த இரட்டை கருப்பையை நுட்பமான லேப்ரோஸ்கோபி சிகிச்சை மூலம் அகற்றி எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். இதுதொடா்பாக மருத்துவமனையின் மகப்பேறு நலத் துறை ... மேலும் பார்க்க

ரயில் கட்டணத்தை உயா்த்த வேண்டாம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

ரயில் கட்டணங்களை உயா்த்த வேண்டாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: இந்திய ரயில்வே என்பது ஏழை, நடுத்தர மக்களின் பயணங்களுக்கா... மேலும் பார்க்க

பாமக கட்சிப் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கம்!

பாமக சேலம் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கப்பட்டுள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், அது பெரிதாக வெ... மேலும் பார்க்க