செய்திகள் :

கூலி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை

post image

சென்னை: நடிகா் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சன் பிக்சா்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், நடிகா் ரஜினிகாந்த் உள்பட பலா் நடித்துள்ள கூலி திரைப்படம் ஆக.14-ஆம் தேதி வெளியாகிறது. பெரும் பொருள்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட்டால் பாதிப்பு ஏற்படும். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கூலி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என பிஎஸ்என்எல், ஏா்டெல் உள்ளிட்ட 36 இணையதள சேவை நிறுவனங்கள் மற்றும் 6 கேபிள் டிவி நிறுவனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளாா்.

மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போராட்டம்!

மனு கொடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர்களை சிதம்பரம் உதவி ஆட்சியர் கிஷன் குமார் வெளியே போக சொன்னதால் அவரை கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மாவ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மக்கள் போராட்டம்; கண்டுகொள்ளாத கனிமொழி! - அண்ணாமலை கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் அமைந்துள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதல்வரோ திமுகவினரோ அவர்களைக் கண்டுகொள்ளவில்லை என தமிழக பாஜக முன்னாள... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி!

முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.பழனி முருகன் கோயிலில், பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, முருகன் மாநாட்டு ம... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று(ஆக. ... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் செய்யும்வரை போராட்டம் தொடரும்: தூய்மைப் பணியாளர்கள்

தங்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும் என்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் கூறியுள்ளனர். சென்னை மாநகராட்சியின் 5, 6 (ராயபுரம், திருவிக நக... மேலும் பார்க்க

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.திருத்தணி அருகே பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இ... மேலும் பார்க்க