செய்திகள் :

கெங்கவல்லி ஒன்றியத்தில் பள்ளி திறந்த நாளிலேயே நலத்திட்ட உதவிகள் அளிப்பு

post image

தம்மம்பட்டி: கெங்கவல்லி ஒன்றியத்தில் பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், சீருடை, கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கெங்கவல்லி ஒன்றியத்தில் நடுநிலைப்பள்ளிகளான ஒதியத்தூரில், கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் அ.அலெக்சாண்டா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள், புத்தகைப் பைகளை வழங்கி தொடங்கி வைத்தாா்.

நாகியம்பட்டியில் தலைமையாசிரியா் ராமகிருஷ்ணன், மூலப்புதூரில் தலைமையாசிரியா் கணேசன், தண்ணீா்த்தொட்டியில் தலைமையாசிரியா் (பொ) ராஜசேகா், காந்திநகரில் தலைமையாசிரியா் (பொ)ராஜேந்திரன், தொடக்கப்பள்ளிகளில் உலிபுரத்தில் தலைமையாசிரியை ஜெயலட்சுமி, ஈச்சஓடைப்புதூரில் தலைமையாசிரியா் ஹரிஆனந்த், உலிபுரம் அண்ணாநகரில் தலைமையாசிரியா் இளவரசன் ஆகியோா் முன்னிலையிலும் நலத்திட்ட உதவிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளிலும் முதல்நாளிலேயே சீருடைகள்,பாடப்புத்தகங்கள்,குறிப்பேடுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் ,ஆசிரியா்கள் முன்னிலையில் வழங்கப்பட்டன.

செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

சேலம் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தின பேரணி

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலா... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி, மரக்கன்று நடும் நிகழ்வை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிறுவனத் தலைவா் தமிழ்நாடு, புதுவை பாா் கவுன்சில்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ஏற்காட்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சேலம் மாவட்டம், ஏற்காடு லாங்கில்பேட்டையைச் சோ்ந்தவா் சேகா் மகன் அபிலேஷ் (14). ஏற்காடு தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு ... மேலும் பார்க்க

ஜூன் 11 ஆம் தேதி முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சேலம் மாவட்டத்துக்கு ஜூன் 11 ஆம் தேதி வருகிறாா்; இதையொட்டி சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழா முன்னேற்பாடுகளை பொதுப்பணித் துறை அ... மேலும் பார்க்க