செய்திகள் :

கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வெள்ளம், நிலச்சரிவு அபாய எச்சரிக்கை!

post image

கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வயநாடு உள்ளிட்ட கேரளத்தின் 4 வட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், அடுத்த 4 முதல் 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைவதற்கு ஏற்ற வானிலை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (மே 20) அம்மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியது.

கேரளத்தின் வட மாவட்டங்களான, காசர்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலக்காடு, மலப்புரம், திரிச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆழப்புலா மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கேரளத்தின் பேரிடர் மேலாண்மை அதிகாரம் கூறுகையில், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில், 204.4 மி.மீ. அளவிலான அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில், 115.6 மி.மீ. அளவிலான மிக கன மழையும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன், அதி தீவிர கனமழை மேலும் பல முக்கிய பாதிப்புகளை உண்டாக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் அதிகளவிலான மழை பெய்யவுள்ளதால் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளதாகவும்; மலைப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்படக் கூடும் எனவும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், அரசுத் துறைகள் விரைந்து எச்சரிக்கையுடன் செயல்பட வலியுறுத்தப்பட்டதுடன், எச்சரிக்கை மிகுந்த பகுதிகளில் வாழும் மக்கள் விரைவாகப் பாதுகாப்பான முகாம்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’! 5 பேர் பலி

பிரபல கன்னட பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு!

பிரபல கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான 'ஹார்ட் லேம்ப்' நிகழாண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. இதனால், சர்வதேச புக்கர் பர... மேலும் பார்க்க

வேகமெடுக்கும் கரோனா தொற்று: மகாராஷ்டித்தில் இருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலியாகினர். கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகையேப் புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சா... மேலும் பார்க்க

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க