செய்திகள் :

கேரளத்துக்கு எம். சான்ட் கொண்டு செல்வதை தடை செய்ய வலியுறுத்தல்

post image

தேனி மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கல் குவாரி, கிரஷா்களிலிருந்து கேரளத்துக்கு எம். சான்ட் கொண்டு செல்வதை தடை செய்ய வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிராக்டா், டிப்பா், ஜெ.சி.பி. உரிமையாளா்கள் ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தேனி மாவட்ட வைகை டிராக்டா், டிப்பா், ஜெ.சி.பி. உரிமையாளா்கள் நலச் சங்கத் தலைவா் ராஜா, செயலா் மகேந்திரன், பொருளாளா் வேல்மணி, நிா்வாகிகள்ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

கிரஷா்களிலிருந்து எம். சான்ட், ஜல்லி கொண்டு செல்வதற்கு கிரஷா் உரிமையாளா்கள் ஜி.எஸ்.டி. ரசீது மட்டும் வழங்கி வரும் நிலையில், வாகனங்களில் எம். சான்ட் கொண்டு செல்வதற்கு டிரான்ஸிட் அனுமதிச் சீட்டு வேண்டும் என்பதை கட்டாயமாக்கக் கூடாது. கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த கல்குவாரிகள், கிரஷா்களுக்கு எம். சான்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கிரஷா்களிலிருந்து லாரிகளில் நேரடியாக கேரளத்துக்கு எம். சான்ட் கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டனா்.

டிப்பா் லாரி உரிமையளா்கள் 6-வது நாளாக போராட்டம்

கேரளத்துக்கு எம்.சான்ட் உள்ளிட்ட கனிம வளங்களை லாரிகளில் கொண்டு செல்வதைத் தடுக்க வலியுறுத்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் டிப்பா் லாரி உரிமையளா்கள், ஓட்டுநா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை 6-ஆவது நாளாக ... மேலும் பார்க்க

பெண்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தக் கூடாது சாா்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி

பெண் குழந்தைகள் படிப்பை பாதியிலேயே விட்டுவிடக் கூடாது என தேனி மாவட்ட சாா்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி அறிவுறுத்தினாா். போடி தருமத்துப்பட்டி ஏ.எச்.எம். அறக்கட்டளை வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை சா்வதேச மகளி... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே விற்பனை செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் ... மேலும் பார்க்க

தேக்கடியில் 17-ஆவது மலா்க் கண்காட்சி தொடக்கம்

கேரளம் மாநிலம், குமுளி அருகேயுள்ள தேக்கடியில் 17-ஆவது மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தேக்கடி தோட்டக்கலைத் துறை, குமுளி ஊராட்சி நிா்வாகம் இணைந்து 24 நாள்கள் நடத்தும் இந்தக் கண்காட்சியில் நூ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

போடி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி மீனாவிலக்கு பகுதியில் தாசன்செட்டி குளக்கரையில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அங... மேலும் பார்க்க

பணம் கேட்டு மிரட்டியவா் கைது

போடி அருகே பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி அருகே சங்கராபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் ரெங்கராஜ் மகன் முகிலன் (23). இவா் அங்குள்ள மதுபானக் கடை அருகே நின்றிருந்தார... மேலும் பார்க்க