செய்திகள் :

கேரளா: "பெட்ரோல் நிலைய கழிப்பறைகள் பொதுப் பயன்பாட்டுக்கு அல்ல" - அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

post image

கேரளாவில் பெட்ரோலிய வணிகர்கள் மற்றும் பல பெட்ரோல் நிலைய உரிமையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பானது, பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகளை பொதுப் பயன்பாட்டுக்கானதாக வகைப்படுத்துவதை எதிர்த்து, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கெதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

பெட்ரோல் நிலையம்
பெட்ரோல் நிலையம்

நீதிபதி சி.எஸ். டயஸ் முன்னிலையில் நேற்று நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையில், "பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் வாடிக்கையாளர்களின் அவசர தேவைகளுக்கானது. அவற்றைப் பொதுமக்களுக்கானதாக மாற்றக்கூடாது." என்று மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

கேரளா உயர் நீதிமன்றம்
கேரளா உயர் நீதிமன்றம்

மனுதாரரின் இத்தகைய கோரிக்கையை ஏற்ற நீதிபதி சி.எஸ்.டயஸ், "பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகளைப் பொதுமக்கள் பயன்படுத்தலாம் என வலியுறுத்த வேண்டாம்" என்று மாநில அரசு மற்றும் திருவனந்தபுரம் நகராட்சிக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, இந்த உத்தரவின் பேரில் நீதிமன்றம் இவ்வழக்கை ஜூலை 17-க்கும் தேதி மேலும் விசாரணைக்குப் பட்டியலிட்டது.

Aadhar Card: ஆதார் கார்டு ஜெராக்ஸ் இனி தேவையில்லை; வரப்போகிறது புதிய ஆப்! | Detail

டிக்கெட் முன்பதிவா... வங்கி சம்பந்தமான ஏதேனும் விஷயமா... இப்படி எந்த விஷயத்திற்கு சென்றாலும், இந்தியாவில் முதலில் கேட்கப்படும் ஆவணம் 'ஆதார்'. ஆனால், எப்போதும் ஆதார் நம் கையில் இருக்கும் என்று சொல்ல மு... மேலும் பார்க்க

``முருகனை வைத்து ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்; ஸ்டாலின் பக்கம்தான் முருகன்..” - சேகர் பாபு

மதுரையில் இந்து முன்னணி சார்பில் வரும் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்... மேலும் பார்க்க

``தந்தை இல்லாத எனக்கு தந்தையாக உதவிய முதல்வர்'' - IITக்கு தேர்வான பழங்குடியின மாணவி நெகிழ்ச்சி

தமிழ்நாடு முதலமைச்சர், மாணவ மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கிடும் வகையில் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வரு... மேலும் பார்க்க

"கூட்டணி பேரம் பேசுவதற்காக கட்சி நடத்தவில்லை; அதிமுகவோடு சேரலாம், ஆனால்" - திருமா சொல்வதென்ன?

தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்குக் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவி... மேலும் பார்க்க

`விவசாயி வேடமிட்டு போலியாகத் திரிகிறார் முதல்வர் ஸ்டாலின்..!' - எடப்பாடி பழனிசாமி காட்டம்

தமிழகத்தில் இந்த ஆண்டு மாம்பழத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு இருப்பதாலும் இதில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிகட்ட வேண்ட... மேலும் பார்க்க

டெல்லி மதராஸி காலனி: 370 தமிழர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.12,000; உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு

டெல்லி மதராசி காலனி அகற்றப்பட்ட போது தமிழர் குடும்பங்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளை தமிழ்நாடு அரசு செய்வதற்குத் தயாராக இருக்கிறது எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.அதன... மேலும் பார்க்க