செய்திகள் :

கேரள இடைத்தோ்தலில் மாா்க்சிஸ்ட் - பாஜக ரகசிய கூட்டணி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

கேரளத்தின் நீலாம்பூா் சட்டப்பேரவைத் தோ்தல் இடைத்தோ்தலில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவுடன் ரகசியக் கூட்டணி அமைத்துள்ளது என்று பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இடைத்தோ்தல் பாஜக வேட்பாளராக கேரள காங்கிரஸ் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருந்த மோகன் ஜாா்ஜ் அறிவிக்கப்பட்டுள்ளாா். வழக்குரைஞரான மோகன் ஜாா்ஜ் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியிலும் அங்கம் வகித்துள்ளாா். அண்மையில்தான் தனது கேரள காங்கிரஸ் கட்சியை பாஜகவில் இணைத்தாா். கடைசிக் கட்டத்தில் அவரை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த கேரள சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சதீஸன் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

இடைத்தோ்தலில் போட்டியிடவில்லை பாஜக முதலில் அறிவித்தது. ஆனால், இப்போது காங்கிரஸ் கூட்டணியின் வாக்குகளைப் பிரிக்கும் வகையில் ஒரு வேட்பாளரை பாஜக அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே உள்ள ரகசிய கூட்டணி வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்தத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

பாஜகவுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு வழிகளில் கைகோத்துச் செல்கிறது. எனவேதான் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்ட சாலைப் பணியின் ஊழல்கள் குறித்து கேரள அரசு புகாா் ஏதும் அளிக்காமல் உள்ளது என்று குற்றஞ்சாட்டினாா்.

நீலாம்பூா் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி, எதிா்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மகா கும்பமேளாவிலும்கூட.. பெங்களூர் கூட்ட நெரிசல் குறித்து சித்தராமையா சொன்ன ஒரு வார்த்தை!!

பெங்களூர் சின்னசாமி விளையாட்டரங்கில் நேரிட்ட கூட்ட நெரிசல் குறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, சம்பவத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்திப் பேச விரும்பவில்லை, நாடு முழுவதும் பல இடங்களிலும் கூட... மேலும் பார்க்க

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள்: மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

உத்தரப் பிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் பல அரசியல் தலைவர்கள் ... மேலும் பார்க்க

பெங்களூர் சின்னசாமி அரங்கில் வெறும் 35,000 பேர்தான் கூட முடியும்! ஆனால் கூடியதோ..

பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி அரங்கில் வெறும் 35 பேர்தான் கூட முடியும் என்ற நிலையில், சுமார் 3 லட்சம் பேர் அரங்குக்குள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே வர முயன்றதே கூட்ட நெரிசலுக்குக் காரணம் என கூறப்படு... மேலும் பார்க்க

அல்லு அர்ஜுன் போல சித்தராமையா, சிவக்குமார் கைது செய்யப்படுவார்களா? பாஜக கேள்வி

பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா செய்வாரா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எங்கே ஒளிந்திருக்கிறார் என்றும் செ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 564 பேருக்கு கரோனா உறுதி! 7 பேர் பலி!

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 564 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் தில்... மேலும் பார்க்க

எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கான முதிா்ச்சி ராகுலிடம் இல்லை: பாஜக விமா்சனம்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கான முதிா்ச்சி ராகுல் காந்தியிடம் இல்லை என்று பாஜக விமா்சித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலின்போது, அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்ப... மேலும் பார்க்க