செய்திகள் :

`கேலிச்சித்திரத்துக்கு எதிரான அதிகார பிரயோகம் நகைச்சுவையாக மாறிவிடும்'- கார்ட்டூனிஸ்ட் பாலா

post image
விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. இந்த முடக்க நடவடிக்கையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. அதில் கலந்துகொண்ட கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் பத்திரிகையாளர் மணிமாறன் ஆகியோரின் கருத்துச்சுதந்திரத்துக்கு ஆதரவான செறிவுமிக்க பேச்சு இங்கே.
கார்ட்டூனிஸ்ட் பாலா

கார்ட்டூனிஸ்ட் பாலா பேசுகையில், ``கார்ட்டூன் என்பது ஒரு சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றது. சமூகத்தில் நடப்பதை சித்திரித்து எழுதுவது. இந்த கார்ட்டூனுக்கு எதிராக அரசு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தும் போது, அந்த கார்டூனை விட அந்த அதிகாரம் கேலிப்பொருளாக மாறிவிடும். இதற்கடுத்து மாநில மற்றும் ஒன்றிய அரசு ஒரு கார்ட்டூனை கார்டூனாக மட்டும் பார்த்து ரசித்துவிட்டு கடந்துபோகும் படி வேண்டுகிறோம். கார்ட்டூன்களுக்கு எதிராக உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, நீங்கள் நகைச்சுவை பொருளாக மாறிவிடுவீர்கள்." என்று பேசினார் கார்டூனிஸ்ட் பாலா.

அவரைத் தொடர்ந்து பேசிய பத்திரிகையாளர் மணிமாறன், "நாம் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கும் போது, மூன்றாவது முறையாக அதே போல இந்தியர்களை போர் விமானத்தில் விலங்கிட்டு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கார்டூன் ஒரு அறச்சீற்றம். இதற்காக விகடன் இணைய தளத்தை கொள்ளைப்புறம் வழியாக அரசு முடக்கியிருப்பது கண்டனத்துக்குரியது. இதுவரை என்னென்ன நடந்தது என்பது பற்றி விரிவாக விகடன் நேற்று இரவு தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளது. இதுவரை அரசிடமிருந்து இணைய தளம் முடக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.

மணிமாறன்

ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற தொனியில் விகடனுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி இணைய தளங்களையும் சோஷியல் மீடியாக்களையும் முடக்குவதை வைத்து ஒன்றிய அரசு எதையோ செய்ய நினைக்கிறது. ஒன்றிய‌ அரசின் இந்த போக்கை முறியடிப்பது நம்முடைய கடமை. அதற்காக பத்திரிகையாளர் மன்றம் எப்போதும் துணை நிற்கும்." என்று பேசினார்

20 ஆண்டுகள்... ரூ.47 லட்சம் சொத்து வரி பாக்கி; நூதன முறையில் வரி வசூல் செய்த தஞ்சாவூர் மாநகராட்சி!

தஞ்சாவூர் சீனிவாசன் பிள்ளை சாலையில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 80 கடைகள் உள்ளன. வணிக வளாக நிர்வாகத்தினர் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் இருந்துள்ளன... மேலும் பார்க்க

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம்; ஒருவர் கைது... சிறையிலடைத்த போலீஸ்!

கடந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்புகளுக்குள்ளாகின. இதில், விழுப்புரம் மாவட்டத்தின் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில்... மேலும் பார்க்க

`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின் சாடல்

கும்பமேளாவை ஒட்டி டெல்லியில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் 18 பேர் மரணமடைந்த நிகழ்வு, நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாமல் கூட்டம் கூட்டமாக... மேலும் பார்க்க

`மொழி' குறித்த ஜெக்தீப் தன்கரின் பேச்சு: `பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது' - கனிமொழி ட்வீட்

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது ... மேலும் பார்க்க

USAID அமைப்போடு நீண்ட கால தொடர்பு; பொய் சொல்கிறதா பாஜக? - Fact Checkers சொல்வதென்ன?

அமெரிக்காவின் USAID அமைப்பு 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவின் தேர்தல் விழிப்புணர்வு பணிகளுக்கு ஒதுக்கியதன் மூலம், இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தலையிடும் விதமாக செயல்பட்டதாக ட்ரம்ப் அ... மேலும் பார்க்க

NEP: `குறுகிய கண்ணோட்டம் வேண்டாம்; அரசியல் காரணங்களுக்காக..! - ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில், தமிழ்நாடு அரசு இதை ஏற்றுக்கொள்ளாவிடில் தமிழ்நாட்டுக்கு கல்விக்கான நிதி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை என்று, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான கடந்த வாரம் கூறியது ம... மேலும் பார்க்க