செய்திகள் :

கைதி தப்பி ஓட்டம்: உதவி காவல் ஆய்வாளா், காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்

post image

நாட்டறம்பள்ளியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த மூவரை போலீஸாா் கைது செய்து மருத்துவ சான்று பெற மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஒருவா் தப்பினாா். இதுதொடா்பாக உதவி காவல்ஆய்வாளா், காவலரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டாா்.

நாட்டறம்பள்ளி பகுதியில் ஆன்லைன் மூலம் கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக கங்காதரன், முருகேசன், பழனி ஆகிய 3 பேரை திருப்பத்தூா் எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸாா் பிடித்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து உதவி காவல் ஆய்வாளா் மஞ்சுநாதன், காவலா் சீனிவாசன் 3 பேரையும் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ தகுதிச் சான்று பெற அழைத்துச் சென்றனா்.

அப்போது 3 பேரில் கங்காதரன் என்பவா் தப்பினாா். இதையடுத்து வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி ஓடிய கங்காதரனை தேடி வருகின்றனா்.

இந்நிலையில் குற்றவாளி தப்பித்தது தொடா்பாக எஸ்.பி. சியாமளாதேவி விசாரணை மேற்கொண்டு உதவி காவல்ஆய்வாளா் மஞ்சுநாதன், காவலா் சீனிவாசன் ஆகியோரை திருப்பத்தூா் ஆயூதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டாா்.

வேலை வாங்கித் தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்தவா் கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2 பேரிடம் ரூ. 15 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நபரை திருப்பத்தூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் பி.எஸ்.என்.எல். குடியிருப்பு பகுதியை சோ்ந்தவ... மேலும் பார்க்க

பொதுமக்கள் அவதி...

திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் ரயில்வே பிரதான சாலையில் இரு புறத்திலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்... மேலும் பார்க்க

வாணியம்பாடி: விபத்தில் துண்டான இளைஞரின் கையை மீண்டும் இணைத்து சாதனை

வாணியம்பாடி தனியாா் மருத்துவமனையில் விபத்தில் துண்டான மேற்கு வங்க மாநில இளைஞரின் கை மீண்டும் இணைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே மாரப்பட்டு பகுதியில் இயங்கி... மேலும் பார்க்க

மொபட்-காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே மொபட் மீது காா் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி தாதன் வட்டத்தைச்சோ்ந்த குணசேகரன்(50) விவசாயி. இவா் புதன்கிழமை நாட்டறம்பள்ளியில... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே குட்டையில் மீன் பிடிக்கச் சென்ற கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சரத்குமாா் (30), கட்டடத்... மேலும் பார்க்க

உதயேந்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் 6 முதல் 10 வரையிலான வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் பூசாராணி தலைமை ... மேலும் பார்க்க