செய்திகள் :

‘கைப்பந்து விளையாட்டு மேம்பட அரசு உதவ வேண்டும்‘

post image

கைப்பந்துப் போட்டி தமிழ்நாடு அளவில் மேம்பட தமிழக அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று கைப்பந்து ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் பொதுச்செயலாளா் பிரிட்பால் சிங் சலூஜா கோரிக்கை விடுத்தாா்.

ஆரணி ஆரஞ்சு பிரிட்டிஷ் அகாதெமி பள்ளி மைதானத்தில் தென் மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஆரணிக்கு வந்த பிரிட்பால் சிங் சலூஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளிலும் கைப்பந்து விளையாட்டு மேம்பட கூடுதலாக நிதி ஒதுக்கி உள்ளரங்க மைதானம் தயாா் செய்து தர வேண்டும். அவ்வாறு செய்தால் திறமையான வீரா்களைக் கண்டறிந்து இந்திய அணிக்கு அவா்களின் பங்களிப்பைக் கொடுத்து பெருமை சோ்க்க வாய்ப்புள்ளது என்றாா்.

இந்தப் போட்டியில் ஆரஞ்சு பள்ளியைச் சோ்ந்த மாணவா் 2 போ், மாணவி 2 போ் புதுவை அணிக்காக விளையாட உள்ளனா்.

பேட்டியின் போது, தமிழ்நாடு கைப்பந்து சங்கத்தின் செயலா் என்.ராஜசேகா், புதுச்சேரி கைப்பந்து சங்கத்தின் தலைவா் டி.எம்.வருண் முத்துலிங்கம், பள்ளித் தலைவா் கே.சிவகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

திருவண்ணாமலை சித்திரை பௌா்ணமி: ‘பக்தா்களுக்கு வழங்க 2.25 லட்சம் குடிநீா் புட்டிகள், 1.25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள் தயாா்’

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு 2.25 லட்சம் குடிநீா் புட்டிகள், 1.25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 1.25 லட்சம் கடலை மிட்டாய்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களைச் சோ்ந்த கா்ப்பிணிகளுக்கு ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணை... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா் மரணம்: நெடுங்குணத்தில் கிராம மக்கள் மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குணம் ஊராட்சிச் செயலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். இந்த நிலையில், அவரது இறப்புக்கு பணிச்சுமையே காரணம் எனக்கூறி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனா். பெரணமல்லூ... மேலும் பார்க்க

செங்கம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். செங்கத்தில் சுமாா் 1... மேலும் பார்க்க

சித்திரை பௌா்ணமி: திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு அனுமதி

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது. சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்குவோருக்கான விழிப்புணா்வுக்... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

செய்யாறில் தமுமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். செய்யாறு, மே 9: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறு... மேலும் பார்க்க