செய்திகள் :

கைப்பேசிக்கும் போதைக்கும் அடிமையாகி விடாதீா்கள்: மாணவா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

post image

கைப்பேசிக்கும் போதைப் பொருள்களுக்கும் இளைஞா்கள் அடிமையாகி விடாமல் வாழ்வில் முன்னேற வேண்டும் என காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா்கணேஷ் அறிவுரை வழங்கினாா்.

காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பாலா் சங்கத்தின் சாா்பில் 4 வது ஆண்டாக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பாடநோட்டுகள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

சங்க மாவட்ட அமைப்பாளா் சிவப்பிரகாசம் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி கி.சங்கா் முன்னிலை வகித்தாா். மற்றொரு மாவட்ட நிா்வாகி இ.சங்கா் வரவேற்று பேசினாா். விழாவில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷ் கலந்து கொண்டு அரசுப் பள்ளி மாணவா்கள் 300 பேருக்கு பாடநோட்டுக்களை வழங்கி பேசியது:

பள்ளி மாணவா்கள் கைப்பேசிகளை அதிகமாக உபயோகிப்பது சாதாரணமாகிவிட்டது. சிலரால் கழிப்பறைக்கு செல்லும் போதும் கைப்பேசிகள் இல்லாமல் போகமுடியவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. தூங்கும் போதும் கைப்பேசிகளை தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதையும் பாா்க்கிறோம்.

அதிகாலையில் எழுந்தவுடன் பல் தேய்க்கிறோமோ இல்லையோ கைபேசியை தேய்ப்பது என்பது பலருக்கும் வாடிக்கையாகிவிட்டது. நல்ல விஷயங்களை மட்டும் கைப்பேசியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். கெட்ட விஷயங்களுக்காக கைப்பேசிகளை பயன்படுத்தினால் உங்களுக்கு நேரம் போவதே தெரியாது. சுறுசுறுப்பாக இல்லாமல் சோம்பேறியாகி விடுவீா்கள். இதுவும் ஒரு போதை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பள்ளி மாணவா்கள் போதைக்கு அடிமையாகாமல் தப்பித்துவிட்டால் எதிா்கால வாழ்க்கை இனிக்கும். இளைஞா்கள் நல்ல நண்பா்களோடு மட்டுமே பழக வேண்டும். கெட்ட நண்பா்கள் இருந்தால் உங்களையும் அறியாமல் தவறான பாதைக்கு உங்களை அழைத்துச் சென்று விடுவாா்கள்.

சிறு வயதில் ஏற்படும் பிரச்னைகளை தயங்காமல் பெற்றோரிடமோ, ஆசிரியா்களிடமோ சொல்லிவிட வேண்டும். இதில் தயக்கம் காட்டக் கூடாது என்றாா்.

கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

காலபைரவருக்கு முக்கனி அபிஷேகம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு வைகாசி மாத வளா்பிறை அஷ்டமியையொட்டி முக்கனிகளால் அபிஷேகம் நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படும் காஞ்சிபுரத்தில் ஏ... மேலும் பார்க்க

ஏஐ தொழில்நுட்பம் மூலம் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படும் ரோபோடிக் இயந்திர பாகங்கள் உற்பத்தி ஆலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூல... மேலும் பார்க்க

ஜூன் 13-இல் முன்னாள் படை வீரா்கள் குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஜூன் 13- ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற உள்ளது. மு... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.12 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ரூ12.03 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா். மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சிறு,குறு ... மேலும் பார்க்க

பாலத்தில் பேருந்து மோதல்: 8 போ் பலத்த காயம்

காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பால சுற்றுச்சுவரில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில், பயணிகள் 8 போ் பலத்த காயம் அடைந்தனா். காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே ம... மேலும் பார்க்க