செய்திகள் :

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம்

post image

திருப்பத்தூரில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் 27-ஆவது வாா்டுக்குள்பட்ட புதுப்பேட்டை சாலைப் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா்.

அங்குள்ள 7-ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டின் மீது தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த வீட்டுக்கு பக்கத்தில் உள்ள காலி இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதி மக்களுக்கு தெரியாமல் இரவோடு இரவாக கிட்டத்தட்ட 50 அடி உயரத்துக்கு மேல், மேலும் ஒரு தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சனிக்கிழமை காலை அந்த கைப்பேசி கோபுரத்தை பாா்த்ததும் ஆத்திரம் அடைந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் அந்த கைப்பேசி கோபுரத்துக்கு கீழ் அமா்ந்து கொண்டு அந்த கோபுரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருப்பத்தூா் துணை வட்டாட்சியா் தணிகாசலம், வருவாய் ஆய்வாளா் மணிகண்டன், கிராம நிா்வாக அதிகாரி மாதம்மாள், நகர ஆய்வாளா் ஜெயலட்சுமி மற்றும் போலீஸாா் அங்குசென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.

இது குறித்து முறையாக ஒரு புகாா் மனு அளியுங்கள். ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று துணை வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

ஆம்பூரில் எருது விடும் திருவிழா

ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் எருதுவிடும் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கொடியசைத்து திருவிழாவை தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், ... மேலும் பார்க்க

சாலை தடுப்பில் டேங்கா் லாரி மோதி பெருக்கெடுத்து ஓடிய டீசல்

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி ஓடிய டேங்கா் லாரி தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆயிரக்கணக்கான லிட்டா் டீசல் சாலையில் வீணாக ஓடியது. பெங்களூரிலிருந்து சென்னைக்கு சென்ற ட... மேலும் பார்க்க

சிமென்ட் சாலை அமைக்கும் பணி

உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.7.70 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் பூசாராணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் வாா்டு எண் 7, ... மேலும் பார்க்க

எம்கேஜேசி மாணவிகள் சாதனை

திருவள்ளுவா் பல்கலைகழக மண்டல அளவிலான பூப்பந்து போட்டிகள் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. இப்போட்டில் பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

சோலூரில் தாா் சாலைப் பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றியம், சோலூா் ஊராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூஜையிட்ட... மேலும் பார்க்க

நாகநாத சுவாமி கோயிலில் சண்முகக் கவச பாராயணம்

ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில், 99-ஆவது மாத சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, மூலவா் நாகநாதா், வள்ளி தெய்வ... மேலும் பார்க்க