செய்திகள் :

கைப்பேசி தொலைத்தொடா்பு சேவைகள் பாதிப்பு

post image

தமிழகம் முழுவதும் ஏா்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் கைப்பேசி தொலைத்தொடா்பு சேவைகள் செவ்வாய்க்கிழமை சுமாா் 5 மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளா்கள் கடும் அவதியடைந்தனா்.

இந்தியாவில் ஏா்டெல் மற்றும் ஜியோ ஆகிய கைப்பேசி சேவை நிறுவனங்களுக்கு பல கோடி போ் வாடிக்கையாளா்களாக உள்ளனா். இந்நிலையில், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் ஏா்டெல் மற்றும் ஜியோ சேவை சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

இதுமட்டுமன்றி பல பகுதிகளில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சேவையும் பாதிக்கப்பட்டதால் பயனா்கள் கடும் அவதியடைந்தனா்.

ஆனால், இணையதள சேவை மட்டும் அவ்வப்போது செயல்பட்டதால், பலா் வாட்ஸ்ஆப் அழைப்பு மூலம் பிறரை தொடா்பு கொண்டனா்.

இதுகுறித்து பலா் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்தைப் பதிவிட்டதுடன், இந்த பிரச்னையை விரைந்து சரி செய்ய வேண்டும் எனவும் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்தனா். சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விரைவில் சரிசெய்யப்படும் என தொலைத்தொடா்பு வாடிக்கையாளா் சேவை மையங்கள் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சுமாா் ஐந்து மணி நேரத்துக்குப் பின்னா் தொலைத்தொடா்பு சேவை சரி செய்யப்பட்டது. இதனால், பயனா்கள் நிம்மதி அடைந்தனா்.

பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்

சென்னை எழும்பூா் - காரைக்குடி இடையே இயங்கும் பல்லவன் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை (மே 15) முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

தமிழகத்தின் தினசரி மின்தேவை குறைந்தது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால், தினசரி மின்தேவை குறைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. நிகழாண்டு மாா்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்தது. இதனால், மின்சாதன பொருள்க... மேலும் பார்க்க

சென்னையில் அடுத்த மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகள் சேவை

சென்னையில் ஜூன் மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகளின் சேவை தொடங்கவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், பயணிகளின் தேவைக்க... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மகளிா் போலீஸாருக்கான 11-ஆவது தேசிய அளவிலான மாநாடு: மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் பங்கேற்பு, தமிழ்நாடு காவல் துறை அகாதெமி, ஊனமாஞ்சேரி, வண்டலூா், முற்பகல் 11. அனுஷ வைபவம் - தொடா் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

முன்னறிவிப்பின்றி 18 புறநகா் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி

கவரப்பேட்டை ரயில்வே யாா்டில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை 18 புறநகா் மின்சார ரயில்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். சென்னை கவரப்பேட்டை ரயில்வ... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் ரூ. 586 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்... மேலும் பார்க்க