செய்திகள் :

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

post image

புனேவில் உள்ள புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், கையில் பணமில்லாததால், நடைபாதையில் படுத்துறங்கிய காட்சியும், அவர் நிறுவனத்தின் மீது வைத்திருந்த குற்றச்சாட்டும் சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது.

புனேவில் உள்ள சஹ்யாத்ரி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தின் எதிரில் உள்ள நடைபாதையில் ஒருவர் படுத்திருக்கிறார். தன்னுடைய சம்பளத்தை நிறுவனம் கொடுக்காமல் நிறுத்திவைத்திருப்பதால், கையில் பணமில்லாமல், தங்க வசதி இல்லாமல், நடைபாதையில் படுத்துக் கிடப்பதாக அவர் கைப்பட எழுதிய கடிதத்தை தன்னுடன் வைத்திருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், தன்னுடைய பெயர் சௌரவ் மோர், ஓரிரு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, ஜூலை 29ஆம் தேதி தான் மென்பொருள் நிறுவனத்துக்குள் நுழைந்தபோது, என்னுடைய அடையாள அட்டை வேலை செய்யவில்லை. உள்ளே நுழைய முடியவில்லை. பிறகு ஜூலை 30ஆம் தேதிதான் எச்ஆர், இது பற்றி என்னிடம் கூறினார். ஊதியம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் வழங்கப்படும் என கூறினார். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. என்னிடம் பணமில்லை, நடைபாதையில்தான் இருக்கிறேன் என்று எச்ஆரிடம் கூறினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்தை ஒருவர் பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மென்பொருள் நிறுவனங்கள் திடீரென ஒரு நாள் வேலையை விட்டு அனுப்புவது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், மென்பொருள் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. அறிவிப்பின்றி ஊழியர் விடுமுறையில் சென்றார். அந்த நாள்களில் அவருக்கான ஊதியம் பிடிக்கப்படும். அப்போது அவரது அடையாள அட்டை செயலற்றுப் போயிருக்கும். இப்போது மீண்டும் அவர் பணிக்கு வந்திருக்கிறார். அவரது பெயர் சேர்க்கப்பட்டு அடையாள அட்டை ஆக்டி்வ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபாதையில் இருப்பது குறித்து அறிந்து அவர் தங்குவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் தரப்பில் ஊழியரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ஊழியரை நடைபாதையிலேயே விட்டுவிட மாட்டோம் என்றும் பதிலளிக்கப்பட்டுள்ளது.

A video of an employee of a renowned software company in Pune lying on the pavement due to lack of money, along with his accusations against the company, has gone viral on social media.

இதையும் படிக்க...உங்கள் கையில் ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? இதைத் தெரிந்துகொள்வது அவசியம்!

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதிவு செய்த கோரிக்கைகள் மற்றும் எம்.பி.க்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்களின் ச... மேலும் பார்க்க

உயிரிழப்பை ஏற்படுத்தும் தென்னிந்திய கருந்தேள் விஷம்: ஆய்வாளா்கள் கண்டுபிடிப்பு

தென்னிந்தியாவில் காணப்படும் கருந்தேள் விஷத்துக்குப் பின்னால் உள்ள மா்மம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பு: கருந்... மேலும் பார்க்க

ரூ.67,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா ஒப்புதல்

ட்ரோன்கள், ரேடாா்கள் உள்பட ரூ.67,000 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு இந்தியா செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தியாவின் ராணுவ வலிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் பிலிப்பின்ஸ் அதிபா் சந்திப்பு: 14 ஒப்பந்தங்கள் கையொப்பம்

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்னாண்டோ ஆா் மாா்கோஸ் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில... மேலும் பார்க்க

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ - ராகுல் குறித்த கருத்துக்கு பிரியங்கா விமா்சனம்

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்துள்ளாா். மேலும், தனது சகோதரா் ராகுல் காந்தி ராணுவம் மீது மிகுந்த ம... மேலும் பார்க்க

ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை கண்டறிந்தது வருமான வரித் துறை: நாடாளுமன்றத்தில் தகவல்

2024-25 நிதியாண்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பான கேள்விக்கு நிதித்த... மேலும் பார்க்க