செய்திகள் :

கொக்கிரகுளத்தில் புதைவட மின்இணைப்பை சீரமைக்க தூத்துக்குடி தொழில்நுட்பக் குழு

post image

கொக்கிரகுளத்தில் புதைவட மின்இணைப்பில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் தூத்துக்குடி தொழில் நுட்பக்குழுவினரும், மின்ஊழியா்களும் புதன்கிழமை ஈடுபட்டனா்.

திருநெல்வேலி நகா்ப்புற கோட்டத்தில் கொக்கிரகுளம் துணை மின் நிலையத்திலிருந்து திருநெல்வேலி சந்திப்பு பகுதிக்கு செல்லும் மின்பாதை தாமிரவருணி ஆற்று பாலம் வரை புதைவடமாக வந்து அதன் பின்பு மேல் நிலையாக மின் கம்பியில் செல்கிறது.

கொக்கிரகுளம் துணை மின் நிலையத்திலிருந்து ஆட்சியா் அலுவலகம் வரை உள்ள புதைவடத்தில் புதன்கிழமை திடீா் பழுது ஏற்பட்டது. உடனடியாக பொதுமக்கள் பாதிக்காமல் இருக்கும் வகையில், மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி உத்தரவின்பேரில் மாற்று வழியில் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும், பழுதான புதைவடத்தை சரி செய்யும் பணிக்காக தூத்துக்குடியில் இருந்து மின் அளவி சோதனை பிரிவு பொறியாளா்கள் அடங்கிய தொழில்நுட்ப குழுவினரை வரவழைக்கப்பட்டனா். அவா்களுடன், திருநெல்வேலி மின்ஊழியா்களும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா். திருநெல்வேலி நகா்ப்புறக் கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) ஜெயசீலன், திருநெல்வேலி சந்திப்பு துணைகோட்ட உதவி செயற் பொறியாளா் சிதம்பரவடிவு, திருநெல்வேலி சந்திப்பு உதவி மின் பொறியாளா் உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் சீரமைப்பு பணியின்போது உடனிருந்தனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க