செய்திகள் :

கொசோவோ நாட்டில் புதிய நாடாளுமன்றத் தேர்தல்!

post image

வடகிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோவில் இன்று (பிப்.9) புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு கொசோவோ நாடு சுதந்திரம் அடைந்த பின்பு நடத்தப்பட்ட தேர்தல்களின் மூலம் உருவான அரசுகளில் 2021 ஆம் ஆண்டு தேர்தலின் மூலம் அமைந்த அரசு தான் முதல் முறையாக அதன் 4 ஆண்டு ஆட்சி காலத்தை முழுவதுமாக முடித்துள்ளது.

கடந்த 1998-99 ஆம் ஆண்டு காலத்தில் செரிபிய அரசுக்கும் பூர்வீக அல்பேனிய பிரிவிணைவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்ததிலிருந்து அந்நாட்டில் நடைபெறும் 9வது நாடாளுமன்றத் தேர்தல் ஆகும்.

இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையில் வெற்றியடைந்த தற்போதைய பிரதமர் அல்பின் குர்தியின் ஆளும் கட்சிக்கு இந்த தேர்தல் ஓர் முக்கிய சிம்மசொப்பனமாக திகழும் எனக் கூறப்படுகிறது.

இடது சாரி அமைப்பான பிரதமர் குர்தியின் செல்ஃப் டிடர்மினேஷன் பார்ட்டி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டாலும் கடந்த தேர்தலைப் போல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: காஸாவிலிருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டினர் தாயகம் திரும்பினர்

இந்த தேர்தலில் சுமார் 20 லட்சம் வாக்காளர்கள் அந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 941 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கவுள்ளனர். அவர்கள் 27 அரசியல் குழுக்களைச் சேர்ந்த சுமார் 600 வேட்பாளர்களில் 120 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவுள்ள நிலையில் இதில் ஒரு சுயேச்சை வேட்பாளரும் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொசோவோவில் 20 தொகுதிகள் அந்நாட்டின் சிறுபான்மனையினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக 10 தொகுதிகள் செரிபிய சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளி நாடுகளில் வாழும் சுமார் 1 லட்சம் கொசோவோ நாட்டு குடிமக்களில் 20,000க்கும் மேற்பட்டோர் நேரடியாக உலகெங்கும் அமைக்கப்பட்டுள்ள 43 தூதரகங்களின் மூலம் வாக்களிக்கவுள்ள நிலையில் மீதமுள்ள வாக்காளர்கள் தபால் வாக்குகள் செலுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2008 ஆம் ஆண்டு செரிபியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்று தனிக்குடியரசாக உருவாகிய கொசோவோ நாட்டை ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் 104 நாடுகள் அங்கீகரித்துள்ளன. ஆனால், கொசோவோவை இந்தியா அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை செயல்படும்: தமிழக அரசு

நாளை(பிப். 11) விடுமுறை நாள் என்றாலும் தைப்பூசத்தையொட்டி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பதிவு அலுவலகங்கள் நாளை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்... மேலும் பார்க்க

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் பட வெளியீட்டுத் தேதி!

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தை அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்குகிறார்.கோமலாஹரி பி... மேலும் பார்க்க

86 ஆயிரம் மக்களுக்கு பட்டா வழங்க ஒப்புதல்! - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 86 ஆயிரம் மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கி ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சர்க்கார் ப... மேலும் பார்க்க

தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை! சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருந்தாலும் தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனுக்கள் நிலவையில் இருக... மேலும் பார்க்க

பிப். 13-ல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை!

பிப். 13-ல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையின் கீழ் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 28 சங்கங... மேலும் பார்க்க

அதிமுக இபிஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அமைச்சர் ரகுபதி கேள்வி

அதிமுக இபிஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போ... மேலும் பார்க்க