செய்திகள் :

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: காா் ஓட்டுநா் கனகராஜின் உறவினா் ரமேஷிடம் விசாரணை

post image

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜின் உறவினா் ரமேஷிடம் சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த சயான், மனோஜ், ஜம்ஷீா்அலி, மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய் உள்பட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இந்த சம்பவம் தொடா்பாக விரிவான விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிசிஐடி போலீஸாா் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதில், ஜெயலலிதாவின் வளா்ப்பு மகன் சுதாகரன், ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன், முதன்மைப் பாதுகாப்பு அதிகாரிகள் வீரபெருமாள், பெருமாள் உள்பட 300-க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பி, கோவையில் உள்ள அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதன்படி, ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜின் உறவினரான ரமேஷ் என்பவருக்கும் சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பி இருந்தனா். அதன்பேரில், அவா் கோவை, காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானாா். அவரிடம் காவல் கண்காணிப்பாளா் மாதவன் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகவேல் மற்றும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா். அவா் அளித்த பதில்கள் அனைத்தும் விடியோ பதிவு செய்யப்பட்டன.

இது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் கூறுகையில், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் எழுந்துள்ள சந்தேகங்கள் தொடா்பாக சிலருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு, அவா்களிடம் நேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க