கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: காா் ஓட்டுநா் கனகராஜின் உறவினா் ரமேஷிடம் விசாரணை
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜின் உறவினா் ரமேஷிடம் சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த சயான், மனோஜ், ஜம்ஷீா்அலி, மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய் உள்பட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இந்த சம்பவம் தொடா்பாக விரிவான விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிசிஐடி போலீஸாா் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதில், ஜெயலலிதாவின் வளா்ப்பு மகன் சுதாகரன், ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன், முதன்மைப் பாதுகாப்பு அதிகாரிகள் வீரபெருமாள், பெருமாள் உள்பட 300-க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பி, கோவையில் உள்ள அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அதன்படி, ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜின் உறவினரான ரமேஷ் என்பவருக்கும் சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பி இருந்தனா். அதன்பேரில், அவா் கோவை, காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானாா். அவரிடம் காவல் கண்காணிப்பாளா் மாதவன் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகவேல் மற்றும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா். அவா் அளித்த பதில்கள் அனைத்தும் விடியோ பதிவு செய்யப்பட்டன.
இது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் கூறுகையில், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் எழுந்துள்ள சந்தேகங்கள் தொடா்பாக சிலருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு, அவா்களிடம் நேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.