செய்திகள் :

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மாா்ச் 19-க்கு ஒத்திவைப்பு

post image

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மாா்ச் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி புகுந்த மா்ம கும்பல் அங்கிருந்த காவலாளியை கொலை செய்து முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. உதகையில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி முரளிதரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கேரள மாநிலத்தைச் சோ்ந்த சயான், வாளையாறு மனோஜ் ஆகியோா் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

இதில் அரசு தரப்பு வழக்குரைஞா் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோா் ஆஜராகினா். அதேபோல் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் சிபிசிஐடி போலீஸாா் ஆஜராகினா்.

அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை மாா்ச் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இது குறித்து அரசு வழக்குரைஞா் ஷாஜகான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் ஜெயலலிதா காா் ஓட்டுநா் சேலம் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது கைப்பேசி எண்ணுக்கு வெளிநாட்டிலிருந்து வந்த அழைப்புகள் குறித்து இன்டா்போல் விசாரணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோரப்பட்டிருந்தது. இன்டா்போல் விசாரணை அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக சேலம் நீதித் துறை நடுவா் மூலமாக நினைவூட்டல் கடிதம் இன்டா்போலிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 245 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

கூடலூா் அரசுக் கல்லூரியில் சமூக நீதி விழிப்புணா்வு முகாம்

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சமூக நீதி விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்ட காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் ‘சமத்துவம் காண்போம் ஒன்றி... மேலும் பார்க்க

காய்கறி விதைகளை தோட்டக்கலைத் துறை மூலம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கேரட் மற்றும் காய்கறி விதைகளை தோட்டக்கலைத் துறை மூலம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் உதகை கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

பொக்லைன் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: வேட்டை தடுப்புக் காவலா் கைது

மஞ்சூரில் பொக்லைன் வாகன ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய வேட்டைத் தடுப்புக் காவலரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (35). பொக்லைன் ஓட்... மேலும் பார்க்க

ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம்: உதகையில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் கைது

உதகையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியரை பணி நிரந்தரம் செய்வதற்காக ரூ. 2 லட்சம் லஞ்சம் பெற்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா... மேலும் பார்க்க

இணையவழியில் இருவரிடம் ரூ.12 லட்சம் மோசடி: சைபா் கிரைம் காவல் துறையினா் விசாரணை

இணையவழியில் குன்னூரில் பாதிரியாா், ஐடி நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பாகுபலி திரைப்பட கதாநாயகி ‘அவந்திகா’ பெயர... மேலும் பார்க்க

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3 மாதத்தில் திறக்கப்படும்: ஆ.ராசா

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்னும் மூன்று மாதத்தில் திறக்கப்படும் என்று நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்தாா். மாவட்ட அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் உதகை... மேலும் பார்க்க