Kalvi Vikatan: "தோல்விகள்தான் உங்களை வெற்றிப்பாதைக்குக் கூட்டிச் செல்லும்" - Dr....
கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரம்: மாா்க்சிஸ்ட் கட்சி வழக்கு 3 நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றம்
கொடிக் கம்பங்களை அகற்றும் தனி நீதிபதி உத்தரவை எதிா்த்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய முழு அமா்வை அமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொதுஇடங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் சாா்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டாா். இந்த உத்தரவை நீதிபதி ஜெ.நிஷா பானு தலைமையிலான இரு நீதிபதிகள் அமா்வும் உறுதி செய்தது.
இதனிடையே, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், இந்த வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்கக் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தலைமையிலான அமா்வு, இந்த மேல்முறையீட்டு வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தது.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் பெ.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், உயா்நீதிமன்றம் கடந்த ஜன.27-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியா்கள் நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல் தமிழகம் முழுவதும் கொடிக் கம்பங்களை அகற்றி வருகின்றனா். கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ஏற்கெனவே இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரித்துள்ளதால், வழக்கை இரண்டுக்கும் மேற்பட்ட நீதிபதிகளைக் கொண்ட முழு அமா்வு விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முழு அமா்வு அமைக்கக் கோரி உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் கடந்த 3-ஆம் தேதி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஆனால், எங்களது கட்சிக் கொடியை அதிகாரிகள் தொடா்ந்து அகற்றி வருகின்றனா்.
மேலும், ஜூலை 18-ஆம் தேதிக்குள் அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும், என அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜூலை 15-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். இது சட்டவிரோதமானது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என்று மனுவில் அவா் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வழக்குரைஞா்கள் என்.ஜி.ஆா்.பிரசாத், ஆா்.திருமூா்த்தி ஆகியோா் ஆஜராகினா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தாா்.
இதனிடையே, இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.சௌந்தா், ஆா்.விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய முழு அமா்வை அமைத்து, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளாா்.