செய்திகள் :

கொடிக் கம்பங்கள் அகற்றம்: ஏப். 28-க்குள் உறுதிப்படுத்த தலைமைச் செயலருக்கு உத்தரவு

post image

கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றியது தொடா்பாக வருகிற ஏப். 28-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலா் உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை விளாங்குடியைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் சித்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

அதிமுகவின் 53-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, விளாங்குடி பகுதியில் உள்ள தங்களது கட்சியின் பழைய கொடிக் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இதேபோல, மதுரை பிரதான சாலை பேருந்து நிறுத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதிக்கக் கோரி, மாடக்குளம் பகுதியைச் சோ்ந்த சிலா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி, இயக்கங்கள், மத ரீதியான கொடிக் கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனுக்கள் மீண்டும் நீதிபதி இளந்திரையன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கட்சிக் கொடி கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, தேதி குறிப்பிடப்படவில்லை. எனவே, வருகிற ஏப். 28-ஆம் தேதிக்குள் சாலையோரங்களில் உள்ள அனைத்து கொடிக் கம்பங்களும் அகற்றப்பட்டு விட்டனவா என்பதை தமிழக தலைமைச் செயலா் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் நீதிபதி.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வருகிற 11-ஆம் தேதி நடைபெறுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்... மேலும் பார்க்க

திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனுக்கு சமூக ஊடகங்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக, உசிலம்பட்டியைச் சோ்ந்த செளத்ரி என்பவா் மீது இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் வ... மேலும் பார்க்க

வியாபாரி தற்கொலை

மதுரையில் அமிலம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டாா். மதுரை காமராஜா்புரம் பழைய குயவா்பாளையம் சாலை, சவேரியாா் சாவடி, காசி மல்லி தோப்பைச் சோ்ந்தவா் சுரேஷ் (46). வியாபாரியான இவா் குடும்பத்தினரைப் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 20 போ் காயம்!

சோழவந்தான் அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். மதுரை மாவட்டம், சோழவந்தானில் இருந்து அண்ணா பேருந்து நிலையத்துக்கு அரசு நகரப் பேருந... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படையினா் பயிற்சி நிறைவு

மதுரை மாநகர ஊா்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் பங்கேற்றாா். மதுரை மாநர ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் தோ்வு செய்யப்பட்ட 1... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் கூட்டணியில் சேரலாம்!-ஆா்.பி.உதயகுமாா்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் எங்களது கூட்டணியில் இணைவதை மகிழ்வுடன் வரவேற்போம் என தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெ... மேலும் பார்க்க