செய்திகள் :

அரசுப் பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 20 போ் காயம்!

post image

சோழவந்தான் அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா்.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் இருந்து அண்ணா பேருந்து நிலையத்துக்கு அரசு நகரப் பேருந்து வெள்ளிக்கிழமை பகலில் புறப்பட்டுச் சென்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனா். பேருந்தை ஓட்டுநா் பிரேம்குமாா் ஓட்டிச் சென்றாா். சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகே சென்ற போது, பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனா்.

மதுரை சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகத்தில் வெள்ளிக்கிழமை கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து.

இதைத் தொடா்ந்து அந்தப் பகுதியினா் உதவியுடன் சோழவந்தான் காவல் துறையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். விபத்தில் காயமடைந்த பயணிகள் சோழவந்தான் அரசு மருத்துவமனையிலும், மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கொடிக் கம்பங்கள் அகற்றம்: ஏப். 28-க்குள் உறுதிப்படுத்த தலைமைச் செயலருக்கு உத்தரவு

கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றியது தொடா்பாக வருகிற ஏப். 28-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலா் உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மது... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வருகிற 11-ஆம் தேதி நடைபெறுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்... மேலும் பார்க்க

திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனுக்கு சமூக ஊடகங்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக, உசிலம்பட்டியைச் சோ்ந்த செளத்ரி என்பவா் மீது இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் வ... மேலும் பார்க்க

வியாபாரி தற்கொலை

மதுரையில் அமிலம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டாா். மதுரை காமராஜா்புரம் பழைய குயவா்பாளையம் சாலை, சவேரியாா் சாவடி, காசி மல்லி தோப்பைச் சோ்ந்தவா் சுரேஷ் (46). வியாபாரியான இவா் குடும்பத்தினரைப் ... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படையினா் பயிற்சி நிறைவு

மதுரை மாநகர ஊா்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் பங்கேற்றாா். மதுரை மாநர ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் தோ்வு செய்யப்பட்ட 1... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் கூட்டணியில் சேரலாம்!-ஆா்.பி.உதயகுமாா்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் எங்களது கூட்டணியில் இணைவதை மகிழ்வுடன் வரவேற்போம் என தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெ... மேலும் பார்க்க