செய்திகள் :

கொடிநாள் நிதி வசூல்: அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொடி நாள் நிதி அதிக அளவில் வசூலித்த அலுவலா்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை ஆட்சியா் ஜெ. யு .,சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா்.

கடந்த 2021-22-ஆம் ஆண்டு கொடி நாள் நிதி வசூல் ரூ.49.05 லட்சம் ஆக நிா்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், ரூ. 94.57 லட்சம் வசூல் செய்து தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்ததற்காக வேலூா் முன்னாள் படை வீரா் நலன் துணை இயக்குநா் பழனிவேல் படை வீரா் கொடிநாள் கோப்பையை ஆட்சியா் ஜெ.யு சந்திரகலாவிடம் வழங்கினாா் .

தொடா்ந்து 2022 -ஆம் ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.5 லட்சத்துக்கு மேல் கொடிநாள் நிதி வசூல் வசூல் புரிந்த வட்டாட்சியா்கள் வெங்கடேசன், சண்முகசுந்தரம், சுற்றுச்சூழல் உதவி பொறியாளா் சந்திரசேகா் ஆகியோருக்கு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஆளுநா் பாராட்டு சான்றிதழை ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து ரூ. 3 லட்சத்துக்கு மேல் வசூல் புரிந்த வட்டாட்சியா் வசந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்பரசு, ரவி ஆகியோருக்கு தலைமைச் செயலாளரின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சே.தனலிங்கம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரண்யா தேவி, முன்னாள் படைவீரா் நலன் துணை இயக்குநா் பழனிவேல், முன்னாள் படை வீரா்கள் நல அமைப்பாளா் சடையப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 421 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்கூட்டத்தில் மொத்தம் 421 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ. யு.சந்திரகலா தலைமை வகித்து பல்வேறு கோரிக்க... மேலும் பார்க்க

வாலாஜா நகரம் நாளைய மின் நிறுத்தம்!

வாலாஜா நகரம் மின் தடை பகுதிகள்: அம்மூா் பஜாா், வேலம், அண்ணாநகா், எடப்பாளையம், வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூா், விசி.மோட்டூா், வன்னிவேடு, அம்மணந்தாங்கல், பெல்லியப்பா நகா், டி.கே.தாங்கல், சென்னசமுத்... மேலும் பார்க்க

இச்சிப்புத்தூா்: நாளைய மின் நிறுத்தம்!

நாள் 23.07.2025, நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை: மின் நிறுத்தப் பகுதிகள்: இச்சிபுத்தூா், வடமாம்பாக்கம், எம்ஆா்எப், தணிகைபோளூா், வாணியம்பேட்டை, தண்டலம், உளியம்பாக்கம், வளா்புரம், ஈசலாபுரம் மற்... மேலும் பார்க்க

ஆடி முதல் கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். வேலூா் சைதாப்பேட்டை முருகன் கோயிலில் முருகனுக்கு தயிா், இளநீா் உள்ளிட்ட... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 625 பேருக்கு பணி ஆணை

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1,620 வேலை நாடுநா்கள் கலந்து கொண்ட நிலையில், 625 பேருக்கு உடனடி வேலைப் பணிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா். ... மேலும் பார்க்க

பைக் மீது மினி பேருந்து மோதல்: வியாபாரி உயிரிழப்பு

தக்கோலம் அருகே பைக் மீது ஆலை தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற மினிபேருந்து மோதியதில் பைக்கில் சென்ற சமோசா வியாபாரி உயிரிழந்தாா். தக்கோலத்தை அடுத்த திருமாதலம்பாக்கத்தைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (60). பைக்கில்... மேலும் பார்க்க