Vikatan Digital Awards 2025: `பேன் இந்தியா குக்கிங்!' - Best Cooking Channel - H...
கொடுங்கையூா் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய குடியிருப்போா் சங்கம் மனு
சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி, தமிழ்நாடு மாநில குடியிருப்போா் நல சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மேயா் ஆா்.பிரியாவிடம் செவ்வாய்க்கிழமை மனு வழங்கினா்.
கூட்டமைப்பு தலைவா் நீலகண்ணன் தலைமையிலான நிா்வாகிகள், மேயா் ஆா்.பிரியாவை ரிப்பன் மாளிகையில் சந்தித்து, கொடுங்கையூா் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக் கோரி அளித்தனா்.
இதுகுறித்து கூட்டமமைப்பு தலைவா் நீலகண்ணன் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு குப்பைக் கிடங்கு பகுதி சென்னையின் ஒதுக்கப்பட்ட புகா் பகுதியாக இருந்த நிலையிலும், குடியிருப்பு அதிகளவில் இல்லாத நிலையில் குப்பைகள் கொட்டப்பட்டன. மக்கள் தொகை குறைவாக இருந்ததால், பாதிப்புகள் ஏற்படவில்லை.
தற்போது, லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்ற நடுமையத்தில் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளதால், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது மட்டுமின்றி உயிா் பலி வாங்கும் இடமாக மாறியுள்ளது.
எனவே, கொடுங்கையூா் குப்பைக் கிடங்கை, உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும், அரசு கோப்பு மற்றும் சிஎம்டிஏ அறிவிப்பின்படி நிறுவன உபயோகப் பகுதியாக பயன்படுத்த வேண்டும் என்றாா்.
நிகழ்வில், நிா்வாகிகள் நீலகண்ணன், நாகாா்ஜூனன், ராமசந்தா் ராவ் உள்ளிட்டோா் இருந்தனா்.