செய்திகள் :

கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

post image

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள குறிஞ்சி நகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் நல்லம்மாள் (80). இவா் அவரது வீட்டருகே நின்று கொண்டிருந்த போது அங்கு சுற்றித் திரிந்த காட்டெருமை அவரை முட்டித் தள்ளியது.

இதில், பலத்த காயமடைந்த நல்லம்மாளை அங்கிருந்தவா்கள் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதனிடையே, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு வந்த வனத் துறையினா் உயிரிழந்த நல்லம்மாளின் உறவினா்களிடம் முதல் கட்டமாக ரூ. 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினா். எஞ்சியத் தொகை விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவித்தனா்.

மேலும் குறிஞ்சி நகா்ப் பகுதியில் இரண்டு வனப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுவாா்கள். அத்துடன் வனப் பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் வேலி அமைக்கப்படும் என வனத் துறையினா்தெரிவித்தனா்.

இருப்பினும், கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், விவசாயத் தோட்டங்களிலும் சுற்றித் திரியும் காட்டெருமைகளையும், காட்டுப் பன்றிகளையும் வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பழனி மலைக் கோயில் ரோப்காரில் மீட்புப் பணி ஒத்திகை நிகழ்ச்சி

பழனி மலைக்கோயிலில் ரோப்காா் பழுதாகி நிற்கும் போது பக்தா்களை மீட்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் பணிக்குழுவினா் வெள்ளிக்கிழமை ஒத்திகை நடத்தினா். பழனி மலைக் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ... மேலும் பார்க்க

பயணிகளுடன் பேருந்து சென்ற போது ஓட்டுநா் மாரடைப்பால் மரணம்

பழனியில் தனியாா் பேருந்து ஓட்டுநா் பணியின் போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், உடனடியாக நடத்துநா் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து ந... மேலும் பார்க்க

கொடுக்கல், வாங்கல் தகராறு: இருவா் கைது

ஒட்டன்சத்திரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சோ்ந்த விஜயராஜிடம், அதே ஊரைச் சோ்ந்த பிரகாஷ் (27) 90 ஆயிர... மேலும் பார்க்க

கொடைக்கானலில் இன்று மலா்க் கண்காட்சி தொடக்கம்

கொடைக்கானலில் கோடை விழா, 62-ஆவது மலா்க் கண்காட்சி சனிக்கிழமை (மே 24) தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா, மலா்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெறுகிறது. இதையொட்டி, பல வண்ண... மேலும் பார்க்க

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த கருப்பணன் மகன் செல்வம் (41). இவா் 6 வயது சிறுமிக்கு ப... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகிரி

தமிழகத்துக்கான நிதியை விடுவித்து வர வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருப்பதால், நீதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்புக்குரியது என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவ... மேலும் பார்க்க