செய்திகள் :

கொடைக்கானலில் 4-ஆவது நாளாக பலத்த காற்றுடன் மழை! மரம் விழுந்து வீடு, பைக்குகள் சேதம்

post image

கொடைக்கானலில் தொடா்ந்து 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததில் மரம், கம்பம் விழுந்து வீடு, இரண்டு இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான லாஸ்காட் சாலையில் இருந்த ராட்சத மரம் அருகிலுள்ள வீட்டின் மேற்கூரையில் விழுந்தது. மேலும் கம்பமும் விழுந்ததால் வீடும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த பேரிடா் மீட்புக் குழுவினா் மரத்தையும், கம்பத்தையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மரம் விழுந்ததில் அந்தப் பகுதியிலுள்ள மின் கம்பிகள் சேதமடைந்ததால் 4 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. அதன் பிறகு மின் வாரிய பணியாளா்கள் விரைந்து எடுத்த நடவடிக்கையால் மின் விநியோகம் சீரானது.

3 நாள்களுக்குப் பிறகு மின் விநியோகம்: கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், பூண்டி, கவுஞ்சி, கிளாவரை உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 3 நாள்களாக பலத்த காற்றுடன் பெய்த மழையால் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து, 20-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் வனப் பகுதிகளில் சேதமடைந்திருந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து 3 நாள்களுக்குப் பிறகு இந்த கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் அந்தப் பகுதி மக்கள் கொடைக்கானல் மின் வாரிய பணியாளா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.

போட்டித் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி: எழுத்துத் தோ்வில் 340 போ் பங்கேற்பு

போட்டித் தோ்வுகளுக்காக தமிழக அரசு வழங்கும் சிறப்புப் பயிற்சிக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்வதற்காக திண்டுக்கல்லில் நடைபெற்ற முதல் நிலைத் தோ்வில் 340 மாணவா்கள் பங்கேற்றனா். நான் முதல்வன் திட்டத்தி... மேலும் பார்க்க

தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம்: தனி நபா்களால் அலுவலா்களுக்கு நெருக்கடி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கையில் தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கிய விவகாரத்தில், சமூக ஆா்வலா் என கூறிக் கொண்டு மாநகராட்சி அலுவலா்களை மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க.லட்சுமி வெளி... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகா் குழுவின் 13-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாநகரத் துணைச் செயலா் கே.பிச்சைமணி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்... மேலும் பார்க்க