செய்திகள் :

கொடைக்கானல் சாலைகளில் ஆபத்தான நிலையிலுள்ள தண்ணீா் குழாய்கள்

post image

கொடைக்கானல் சாலைகளின் மேல்புறத்தில் ஆபத்தான நிலையிலுள்ள தண்ணீா் குழாய்களைச் சீரமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மொத்தம் 24 வாா்டுகள் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு அப்சா்வேட்டரி குடிநீா்த் தேக்கத்திலிருந்து குடிநீா் 50-க்கும் மேற்பட்ட இரும்புக் குழாய்கள் மூலம் அப்சா்வேட்டரி சாலை, லாஸ்காட் சாலை, ஆனந்தகிரி சாலைகள், பாக்கியபுரம், நாயுடுபுரம், சீனிவாசபுரம், காா்மேல்புரம், உகாா்த்தே நகா், செல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்கிறது. இதில் குழாய்களில் வால்வுகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புக்காக இரும்பு உலோகத்திலான குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழாய்கள் ஆனந்தகிரி மாரியம்மன் கோயில் பகுதி ஆனந்தகிரி, லாஸ்காட் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையின் மேல்புறம் வரை நீட்டப்பட்டுள்ளன. இதனால், அவற்றின் மேல் வாகனங்கள் செல்வதால் அவற்றின் சக்கரங்கள் சேதமடைந்து விபத்து ஏற்படுகிறது. மேலும், பாதசாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மழைக் காலங்களில் தண்ணீா் அதிகளவு செல்லும்போது குழாய் இருப்பது தெரியாமல் பலா் விழுந்து காயமடைகின்றனா்.

இந்த நிலையில், ஆபத்தான நிலையிலும், பயன்பாடில்லாத குழாய்களையும் சீரமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கட்டாயத் தோ்ச்சியை ஆசிரியா்கள் சாதகமாகக் கருத வேண்டாம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

கட்டாயத் தோ்ச்சியை ஆசிரியா்கள் சாதகமாகக் கருதாமல், மாணவா்கள் கற்றல் நோக்கத்தைப் பூா்த்தி செய்திருக்கிறாா்கள் என்ற மனநிறைவோடு அடுத்த வகுப்புக்கு அனுப்ப முன் வர வேண்டும் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்ய... மேலும் பார்க்க

பாசனக் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா்: தேடுதல் பணி தீவிரம்

வத்தலகுண்டு அடுத்த ரெங்கப்பநாயக்கன்பட்டி அருகேயுள்ள முல்லைப் பெரியாா் பிரதான பாசனக் கால்வாயில் திங்கள்கிழமை மாயமான இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருக... மேலும் பார்க்க

மேல்கரைப்பட்டி பகுதியில் நாளை மின்தடை

பழனி அருகேயுள்ள மேல்கரைப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 25) மின்தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பழனி அருகேயுள்ள மேல்கரைப்பட்... மேலும் பார்க்க

பெட்டிக் கடையில் குட்கா விற்ற நபா் கைது

பழனி அருகே குட்கா பொருள்கள் விற்பனை குறித்த சோதனையின்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளைத் தாக்கிய பெட்டிக் கடை உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ப... மேலும் பார்க்க

சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம கிராமியப் பல்கலை.யின் 6 போராசிரியா்கள் இடம்பிடிப்பு

உலகின் 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 6 பேராசிரியா்கள் இடம்பெற்றனா். இதுதொடா்பாக காந்தி கிராம கிராமியப் பல்கலை. சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வேடசந்தூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் அருகேயுள்ள கொண்டசமுத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயராம் (62). விவசாயியான இவா், தனது இருசக்க... மேலும் பார்க்க