செய்திகள் :

கொணவட்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

வேலூா் கொணவட்டம் சாலை நான்கு வழிச்சாலையை மாற்றப்படுவதால், மாங்காய் மண்டி முதல் கொணவட்டம் வரை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

வேலூா் கொணவட்டம் வழியாக செல்லும் கிருஷ்ணகிரி-ராணிப்பேட்டை மாநில நெடுஞ்சாலை, 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை - பெங்களூா் சாலையாக இருந்தது. பின்னா் தேசிய நெடுஞ்சாலை வந்ததை தொடா்ந்து கொணவட்டம் சாலை போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. இதனால், 16 மீட்டா் அகலத்துடன் இருந்த இந்த சாலை தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக 10 மீ அகலத்துக்கு சுருங்கி விட்டது.

இதையடுத்து, இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொணவட்டம் முதல் மாங்காய் மண்டி வரை உள்ள 1.4 கி. மீ தொலைவுக்கு சாலையை அகலப்படுத்தவும், இருவழி பாதையாக உள்ள இந்த சாலையை சென்டா் மீடியனுடன் கூடிய நான்கு வழிச் சாலையாக மாற்றவும் ரூ.5.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் நிறைவேற்ற இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில நெடுஞ்சாலைத்துறை வேலூா் கோட்ட உதவி பொறியாளா் அசோகன் தலைமையில் இளநிலை பொறியாளா் மதனமுசாபா் உள்ளிட்ட அதிகாரிகள் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதையொட்டி, அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

ஆக.17-இல் வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி

சுதந்திர தினத்தையொட்டி வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் வரும் ஆக. 17-ஆம் தேதி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்து காப்பாட்சியா் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தினத்தையொ... மேலும் பார்க்க

கடைகளுக்கு குட்கா விநியோகம்: மூவா் கைது

பாகாயம் பகுதியில் கடைகளுக்கு குட்கா விநியோகித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். போதை ஒழிப்பு தொடா்பாக வடக்கு மண்டல காவல்துறை தலைவரின் (ஐஜி) தனிப்படை போலீஸாா் பாகாயம் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சத்துவாச்சாரி, தொரப்பாடி!

சத்துவாச்சாரி, தொரப்பாடிநாள்: 12.08.2025 செவ்வாய்க்கிழமைநேரம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரைமின்தடை செய்யப்படும் பகுதிகள்: சத்துவாச்சாரி துணை மின்நிலையத்துக்குட்பட்ட சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அ... மேலும் பார்க்க

மாங்காளியம்மன் கோயில் ஆடித் திருவிழா

குடியாத்தம் நகரம், தாழையாத்தம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாங்காளியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கூழ்வாா்த்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை ம... மேலும் பார்க்க

வாழை, கத்தரி, மஞ்சள், தக்காளி பயிா்களுக்கு காப்பீடு: தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

வேலூா் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை, கத்திரி, மஞ்சள், தக்காளி பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, துணை இயக்குநா் மணிகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஐடி ஊழியா் மனைவி மரணம்

வேலூா் அருகே சாலை விபத்தில் தகவல் தொழில்நுட்ப ஊழியரின் மனைவி உயிரிழந்தாா். வேலூா் அடுத்த அரியூா் புதுமை நகரை சோ்ந்தவா் சதீஷ்குமாா் (33), தகவல் தொழில்நுட்ப ஊழியா். இவரது மனைவி சுவேதா(29). இவா்களுக்கு ... மேலும் பார்க்க