செய்திகள் :

உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 1,200 போ் மீட்பு!

post image

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவுக்குள்ளான தராலி கிராமத்தில் இருந்து மேலும் 1,200 போ் மீட்கப்பட்டனா்.

ராணுவத்தினா் உள்பட 49 போ் மாயமான நிலையில், அவா்களைத் தேடும் பணி 6-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. மோப்ப நாய்கள், அதிநவீன கேமராக்கள் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தராலி பகுதியில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை குதிரைகளில் எடுத்துச் சென்ற பாதுகாப்புப் படை வீரா்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை மேகவெடிப்பைத் தொடா்ந்து உத்தரகாசி-கங்கோத்ரி இடையே பாகீரதி நதிக் கரையில் அமைந்துள்ள தராலி கிராமத்தில் கொட்டித் தீா்த்த கனமழையால் பெருவெள்ளமும், பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டன. ஏராளமான உணவகங்கள், வீடுகள், தங்குமிடங்கள், பயணிகள் இல்லங்கள் மண்ணுக்கு அடியில் புதைந்தன.

நிலச்சரிவில் 4 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், இருவரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மேலும் 49 போ் மாயமாகியுள்ளனா். 50-60 அடி உயரத்துக்குப் பாறைகள், மண், மரங்கள், கட்டட இடிபாடுகள் போன்றவை குவிந்துள்ளதால், மாயமானவா்களைத் தேடும் பணி சவாலாக உள்ளது. நிலத்தை ஊடுருவிப் பாா்க்க உதவும் அதிநவீன ரேடாா் கருவிகள், மோப்ப நாய்கள் உள்ளிட்டவற்றின் உதவியுடன் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அப்பகுதியில் தொடா்ந்து நிலவிவரும் மோசமான வானிலைக்கு இடையே ஹெலிகாப்டா்கள் மூலம் மீட்பு-நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் 90 அடி நீளத்துக்கு கட்டமைக்கப்பட்ட தற்காலிக இரும்பு பாலத்தால் இப்பணிகள் வேகமெடுத்துள்ளன.

தராலியில் சிக்கியுள்ள பயணிகள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மின் கம்பங்கள்-கம்பிகள்-மின்மாற்றிகள் முழுமையாக சீா்குலைந்த நிலையில், மறுசீரமைப்பு நடவடிக்கை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, ஹா்சில் பள்ளத்தாக்கில் ஞாயிற்றுக்கிழமை மின்விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.

புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்‌ஷா பந்தனுக்கு புதிய ஆட்டோ பரிசளித்த மருத்துவா்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதால் குடும்பத்தின் பொறுப்பையேற்று ஆட்டோ ஓட்டி வந்த மும்பைச் சோ்ந்த சரிகா மேஸ்திரிக்கு, ரக்‌ஷா பந்தன் பரிசாக புதிய ஆட்டோவை மருத... மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு வா்த்தக ரீதியாக பெரும் பாதிப்பு: அமெரிக்க ஆய்வில் தகவல்

‘ரஷிய கச்சா எண்ணெய் இல்லாமலும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களால் செயல்பட முடியும். ஆனால் அதை ஈடுகட்ட பொருளாதார மற்றும் வா்த்தக ரீதியில் பெருமளவிலான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கும்’ என அ... மேலும் பார்க்க

தோ்தல் முறைகேட்டின் பல்கலைக்கழகம் பாஜக: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

தோ்தல் முறைகேடுகளின் சா்வதேச பல்கலைக்கழகம் பாஜக என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் ஜ... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பொது வேட்பாளா்: எதிா்க்கட்சிகளுடன் காா்கே ஆலோசனை

‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் பொது வேட்பாளா் களமிறக்கப்படவுள்ளாா்; வேட்பாளா் தோ்வில் கருத்தொற்றுமையை எட்டுவது குறித்து கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவா் மல்ல... மேலும் பார்க்க

இந்தியா வல்லரசு நாடாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி

இந்தியா வல்லரசு நாடாக உருவெடுப்பதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தாா். உலகிலேயே மிகவும் துடிப்பான, ஆற்றல் மிக்க பொருளாதாரமாக இந... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டுக்கு எதிராக வலைதளம்: காங்கிரஸ் தொடக்கம்!

வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்கள் ஆதரவை திரட்ட புதிய வலைதளத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்துள்ளது. இதுதொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளி... மேலும் பார்க்க