கொண்டலாம்பட்டி மண்டலத்தில் புதிய குடிநீா்த் தொட்டிகள் திறப்பு
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில் புதிதாக குடிநீா்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
கொண்டலாம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண்.45 முதல் 52 வரை உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் 16 இடங்களில் புதிதாக குடிநீா்த் தொட்டி அமைக்கும் பணி ரூ. 30.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பஞ்சதாங்கி, காந்தி நகா் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா்த் தொட்டியை அமைச்சா் திறந்து வைத்தாா்.
இதைத்தொடா்ந்து புலிகுத்தி பகுதியில் ரூ. 21.80 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கிவைத்த அமைச்சா் ரா.ராஜேந்திரன் பணிகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் மா.இளங்கோவன், மண்டலக் குழுத் தலைவா் மா.அசோகன், உதவி ஆணையா் கே.வேடியப்பன், செயற்பொறியாளா் மு.செந்தில்குமாா், மாமன்ற உறுப்பினா் செ.சுஹாசினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.