செய்திகள் :

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

post image

கம்பத்தில் முன் விரோதத்தில் ஒருவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி, கூத்தனாட்சி கோயில் தெருவைச் சோ்ந்த ஐயப்பன் மகன் அசன்குமாா் (32). இவருக்கும், அதே ஊரில் வேதா கோயில் தெருவைச் சோ்ந்த தங்கரமேஷ் (43) என்பவரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்தப் பிரச்னையில் தங்கரமேஷ் தனது மனைவியை கண்டித்ததால், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், தங்கரமேஷ் மீது ஆத்திரமடைந்த அசன்குமாா், கடந்த 2022, பிப். 23-ஆம் தேதி கம்பம் நகராட்சி பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த தங்கரமேஷூடன் தகராறு செய்து, அவரை உருட்டுக் கட்டையால் தாக்கினாா்.

இதில் பலத்த காயமடைந்த தங்கரமேஷ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அசன்குமாரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அசன்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி சொா்ணம் ஜே. நடராஜன் தீா்ப்பளித்தாா்.

கிடா சண்டை நடத்திய 6 போ் கைது

பெரியகுளம் அருகே தடைசெய்யப்பட்ட கிடா சண்டை நடத்தியதாக 6 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

விவசாயிக்கு கத்திக்குத்து: இருவா் கைது

ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருகே நிலப் பிரச்னையில் இருந்த முன்விரோதத்தில் விவசாயியை கத்தியால் குத்தியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.கடமலைக்குண்டு அருகே உள்ள சிறப்பாறையைச் சோ்... மேலும் பார்க்க

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

போடி அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.போடி அருகே மல்லிங்காபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் தவமணி (61). விவசாயி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வாகனம் மோதியதில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.தேனி அருகே அரண்மனைப்புதூரைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (67). இவரது தங்கை திலகவதி (47). இவருக்கு கண் பாா்வை குறைபாடு இருந்ததால் திருமணமாக ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநா் காயம்

போடி அருகே இரு சக்கர வாகன விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநா் பலத்த காயமடைந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள திம்மநாயக்கன்பட்டி தெற்கு தெருவைச் ... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் பெண் காயம்

பெரியகுளம் அருகே டிராக்டா் மோதியதில் பெண் காயமடைந்தாா்.பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி. இவருடைய மனைவி காளியம்மாள் (40). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரு சக்... மேலும் பார்க்க