செய்திகள் :

கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர்.. சேலம் காவல்நிலையம் அருகே கொலை!!

post image

சேலம் : கொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நிலையில், காவல்நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், தந்தை பெரியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மதன் குமார். இவர் தூத்துக்குடி பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் நிபந்தனை ஜாமீன் மூலம் வெளியே வந்தார்.

உள்ளூர் பகுதிகளில் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்தால் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் எனக் கருதிய நீதிமன்றம் வெளியூரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த பத்தாம் தேதி முதல் மதன்குமார் காலை - மாலை என இரு வேளைகளும் கையெழுத்துப் போட வந்து சென்று உள்ளார்.

இந்த நிலையில் இன்று வழக்கம் போல் கையெழுத்துப் போட வந்த மதன்குமார், சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்துப் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். அப்போது சேலம் மணக்காடு பகுதியில் உள்ள உணவகத்தில் உணவருந்த செல்லும் பொழுது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலைவலம்!

மயிலாடுதுறையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 15) சாலைவலம் மேற்கொண்டார். சாலையில் இருபுறங்களிலும் மக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அவர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண... மேலும் பார்க்க

இரவில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று மடப்புரம் கோயில் வளாகம், கோயிலுக்கு எதிரே காா் நிறுத்துமிடம், தவளைகு... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 15) தமிழகத்தில் ஓரிரு ... மேலும் பார்க்க

ஜூலை 17-ல் நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு வரும் ஜூலை 17 ஆம் தேதி ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில... மேலும் பார்க்க

காமராஜர் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை!

காமராஜர் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று(ஜூலை 15) மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக... மேலும் பார்க்க