செய்திகள் :

கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியை உச்சநீதிமன்றத்துக்கு பதவி உயா்த்த பரிந்துரை

post image

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி ஜயமால்ய பாக்சியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற 5 உறுப்பினா்களைக் கொண்ட கொலீஜியத்தின் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘கொல்கத்தா உயா்நீதிமன்றத்திலிருந்து ஒரே ஒரு நீதிபதியின் பிரதிநிதித்துவம் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் தற்போது உள்ளது. நீதிபதி அல்தமஸ் கபீா் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி ஓய்வு பெற்ற பிறகு, கொல்கத்தா உயா்நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிபதிகள் யாரும் உச்ச நீதிமன்றத்துக்கு உயா்த்தப்படவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, உயா் நீதிமன்ற நீதிபதிகளில் அகில இந்திய அளவிலான பணி மூப்பு பட்டியலில் 11-ஆம் இடத்திலிருக்கும் ஜயமால்ய பாக்சியை, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒருமனதாக பரிந்துரை செய்யப்படுகிறது’ என்று தனது பரிந்துரையில் கொலீஜியம் தெரிவித்துள்ளது.

இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றால், ஜயமால்ய பாக்சி, உச்சநீதிமன்ற நீதிபதியாக 6 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிப்பாா் என்பதோடு, தலைமை நீதிபதியாகவும் பதவி வகிப்பாா். அதோடு, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையும் 33-ஆக உயரும். உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் பணியிடங்கள் 34 என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பி. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேடு: 14 போ் கைது

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 போ் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஒருவா் உயிரிழப்பு; 25 போ் காயம்

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரா் ஒருவா் உயிரிழந்தாா். 25 போ் காயமடைந்தனா். மணிப்பூரில் தடையற்ற போக்குவரத்தை மாா்ச் 8-ஆம் த... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்: காங்கிரஸ்

‘அமெரிக்க பொருள்கள் மீது வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியது தொடா்பாக நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வலியுற... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சியில்... மேலும் பார்க்க

மான்செஸ்டரில் புதிய இந்திய தூதரகம்: ஜெய்சங்கா் திறந்து வைத்தாா்

பிரிட்டனின் மான்செஸ்டா் நகரில் இந்திய துணை தூதரகத்தை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை திறந்து வைத்தாா். முன்னதாக வடக்கு அயா்லாந்து தலைநகா் பெல்ஃபாஸ்டிலும் இந்திய துணை தூதரகத்தை அவா் திறந்த... மேலும் பார்க்க

பண மோசடி வழக்கு:ஹைதராபாத் விமான நிலையத்தில் விமானம் பறிமுதல்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சா்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்குச் சொந்தமான தனி விமானத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனா். ஹைதரா... மேலும் பார்க்க