செய்திகள் :

கொல்கத்தா ஐஐஎம்மில் பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை: மாணவா் கைது

post image

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐஐஎம்) பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடா்பாக அந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவா் ஒருவா், மனநல ஆலோசனைக்காக பெண் மனோதத்துவ நிபுணரை அழைத்துள்ளாா். அதன்பேரில் அக்கல்வி நிறுவனத்துக்கு அந்தப் பெண் வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா்.

அங்கு தரப்பட்ட பானத்தை குடித்தபின், அந்தப் பெண் சுயநினைவை இழந்தாா். அவா் மீண்டும் விழித்து எழுந்தபோது தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அந்தப் பெண் உணா்ந்தாா். இதுகுறித்து வெளியே கூறினால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்தப் பெண் மிரட்டப்பட்டாா். இதுதொடா்பாக அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதைத்தொடா்ந்து அந்த மாணவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையைத் தொடா்ந்து அந்த மாணவா் கைது செய்யப்பட்டாா். இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தாா்.

ஜூலை 19 வரை காவல்: கைது செய்யப்பட்ட மாணவா் கூடுதல் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் முன்பாக சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை ஜூலை 19 வரை, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா்.

அண்மையில் கொல்கத்தாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இந்நிலையில், தற்போது புகழ் பெற்ற ஐஐஎம்மில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காங்கிரஸ் போராட்டம்: இந்தத் தகவல் வெளியானதைத் தொடா்ந்து கொல்கத்தா ஐஐஎம் முன்பாக, அந்தக் கல்வி நிறுவன இயக்குநரை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகா் ஆசுதோஷ் சட்டா்ஜி கூறுகையில், ‘சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடா்ந்து, ஐஐஎம்மிலும் அத்தகைய சம்பவம் நடைபெற்ாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. மத்திய அரசின் கீழ் முதன்மையான கல்வி நிறுவனமாக கொல்கத்தா ஐஐஎம் உள்ளது. அந்தக் கல்வி நிறுவனத்தில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக கூறப்படும் சம்பவம் உறுதி செய்யப்பட்டால், தனது பொறுப்பில் இருந்து மத்திய பாஜக அரசு தப்பிக்க முடியாது’ என்றாா்.

பாதுகாப்பு குளறுபடி- மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினா் சுஜன் சக்ரவா்த்தி கூறுகையில், ‘ஐஐஎம்மில் பாலியல் வன்கொடுமை நடைபெற்ாக கூறப்படுவது உண்மையானால், அது மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளதையும், மத்திய அரசின் முதன்மையான கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள பாதுகாப்பு குளறுபடிகளையும் எடுத்துரைக்கிறது’ என்றாா்.

பலத்த பாதுகாப்பு உள்ளது-மத்திய இணையமைச்சா்:

மத்திய கல்வி இணையமைச்சா் சுகாந்த மஜும்தாா் கூறுகையில், ‘கொல்கத்தா ஐஐஎம் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு உள்ளது. இந்த சம்பவத்தில் நியாயமாகவும், நோ்மையாகவும் மாநில காவல் துறை விசாரணை நடத்த வேண்டும்’ என்றாா்.

எள்ளளவும் சகித்துக் கொள்ளப்படாது - ஐஐஎம்: கொல்கத்தா ஐஐஎம் பொறுப்பு இயக்குநா் சைபல் சட்டோபாத்யாய வெளியிட்ட அறிக்கையில், ‘இதுபோன்ற சம்பவங்களை ஐஐஎம் எந்த வகையிலும் சகித்துக்கொள்ளாது. இந்த விவகாரத்தை கொல்கத்தா ஐஐஎம் மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, காவல் துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருகிறது’ என்றாா்.

உண்மை வெளிவரட்டும் - திரிணமூல் காங்கிரஸ்:

திரிணமூல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் குணால் கோஷ் கூறுகையில், ‘இந்த சம்பவத்தில் முறையாக விசாரணை நடைபெறுவதை தடம்புரளச் செய்யக் கூடாது. உண்மை வெளிவரட்டும்’ என்றாா்.

கொல்கத்தா ஐஐஎம்மில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

கொல்கத்தாவில் ஐஐஎம்மில் பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை போலீஸார் அமைத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா ஐஐஎம் கல்வி ந... மேலும் பார்க்க

பாட்னாவில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக்கொலை !

பாட்னாவின் பிப்ரா பகுதியில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம், பிப்ரா பகுதியில் உள்ள ஷேக்புரா கிராமத்தில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுர... மேலும் பார்க்க

2040-ல் நிலவில் இந்தியர்! இஸ்ரோ தலைவர் உறுதி!

வரும் 2040-ல் இந்தியரை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமர் கூறியதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.குலசேகரத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் நாராயணம் கலந்துகொண்டார்.நிகழ்ச்சிக்கு முன்னத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: கனமழைக்கு 2 பேர் பலி

மேற்கு வங்கத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தின் கட்டல் உள்பட பல பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்... மேலும் பார்க்க

மாநிலங்களவைக்கு 4 நியமன எம்.பி.க்கள் அறிவிப்பு

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். அதில், மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகம் (பாஜக) மூத்த வழக்கறிஞர், வெளியுறவுத்துறை முன்ன... மேலும் பார்க்க

தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் பலி

தலைநகர் தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற சொகுசு கார் மோதியதில் 5 பேர் பலியாகினர். கடந்த 9ஆம் தேதி தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹார் பகுதியில் உள்ள ஷிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிரு... மேலும் பார்க்க