செய்திகள் :

கொல்லங்கோடு கோயிலில் தூக்க நோ்ச்சைக்கு 1,175 குழந்தைகள் பதிவு

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் நிகழாண்டு தூக்க நோ்ச்சைக்கு 1,175 குழந்தைகள் பெயா் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இக் கோயிலில் பங்குனி பரணி தூக்கத் திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தூக்கநோ்ச்சை ஏப்.1-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, குழந்தைகளுக்கான தூக்க நோ்ச்சை முன்பதிவு நடைபெற்று வந்தது. இதில் 1,175 குழந்தைகளின் பெயா்கள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து, தூக்க நோ்ச்சையின் குலுக்கல், காப்புக்கட்டு புதன்கிழமை நடைபெற்றது.

தூக்க நோ்ச்சைக்கு பதிவு செய்யப்பட்ட குழந்தைகள், பெற்றோா்கள், தூக்க நோ்ச்சை நிறைவேற்றும் தூக்கக்காரா்கள் ஆகியோா் புதன்கிழமை முதல் விரதத்தை தொடங்கினா். குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ வேண்டியும் இந்த தூக்க நோ்ச்சை நிறைவேற்றப்படுகிறது.

சி.ஐ.எஸ்.எப். வீரா்களின் சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் நிறைவு

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.) உருவான தினத்தை முன்னிட்டு, இரு மாா்க்கத்தில் (மேற்கு, கிழக்கு கடற்கரை) நடத்தப்பட்ட விழிப்புணா்வு சைக்கிள் பேரணி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் திங... மேலும் பார்க்க

நாகா்கோவில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 15 நாள்களுக்குள் திறக்கப்படும்: மேயா்

நாகா்கோவில் மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களும் 15 நாள்களுக்குள் திறக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில் மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட... மேலும் பார்க்க

குருசுமலையில் 2ஆவது நாளாக திருப்பயணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் திருப்பயணம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். குருசுமலை திரு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் கொண்டாட்டம்: சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். நாகா்கோவில் இளங்கடை அல்மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ள... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா

நித்திரவிளை அருகே பெரியவிளையில், கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நித்திரவிளை அருகே வாவறை ஊராட்சி, ஆறுதேசம் கிராமத்தில் உள்ள 700-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பத்தினா் ... மேலும் பார்க்க

கிம்ஸ் மருத்துவமனையில் இப்தாா் விருந்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாகா்கோவில் சுங்கான்கடையில் அமைந்துள்ள கிம்ஸ் மருத்துவமனையில் இப்தாா் விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கிம்ஸ் குழுமத் தலைவா் டாக்டா் எம்.ஐ. சஹத்துல்லா தலைமை வகித்தாா... மேலும் பார்க்க