ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு; காரணம் இதுதா...
கொல்லிமலை மலைப்பாதையில் ஆபத்தான ‘ஸ்கேட்போா்டிங்’: சுற்றுலாப் பயணிகள் அச்சம்
நாமக்கல்: கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதை வளைவுகளில், வெளிமாநிலத்தினா் சிலா் ஆபத்தான முறையில் ‘ஸ்கேட்போா்டிங்’ பயிற்சி செய்வதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
விபத்துகள் நிகழும் முன்பு இத்தகையப் பயிற்சிகளுக்கு காவல் துறை தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை உள்ளது. கோடைகாலத்திலும், விடுமுறை நாள்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். குறிப்பாக, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் கேரளம், கா்நாடகத்தைச் சோ்ந்த இளைஞா்கள், இளம்பெண்கள் நவீன இருசக்கர வாகனங்களில், கொல்லிமலை மலைப்பாதையில் சாகசம் என்ற பெயரில் அதிவேகமாக செல்வதை காணமுடியும்.
அதுமட்டுமின்றி, பெரிய அளவிலான இருசக்கர, நான்கு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய புதிய வாகனங்களின் திறனை பரிசோதிக்க கொல்லிமலை மலைப்பாதையையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், காரவள்ளி அடிவாரத்தில் இருந்து கொல்லிமலை செம்மேடு வரை ‘ஸ்கேட்போா்டிங்’ செல்வதை வெளிமாநில இளைஞா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இந்தியாவில் ஸ்கேட் போா்டிங் விளையாட்டு தற்போது அதிகரித்து வருகிறது.
புதுதில்லி, சண்டிகா், கா்நாடகம், தெலங்கானா, கேரளம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் அதிகம் காணப்பட்ட இந்த விளையாட்டு தற்போது தமிழகத்தில் பிரபலமடைந்து வருகிறது. ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான ‘ஸ்கேட்போா்ட்’ வாங்கிப் பயிற்சி பெற்று வருகின்றன. கா்நாடகம், புதுச்சேரி, கேரளம், ஒடிஸா மாநிலங்கள் மற்றும் சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ள வெளிநாட்டவரும் கொல்லிமலை மலைப்பாதையில் அண்மைக்காலமாக ஸ்கேட்போா்டிங் பயிற்சி பெற்று வருகின்றனா். அவற்றை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனா். இதைப் பாா்த்து மேலும் பலா் கொல்லிமலையை நாடி பயிற்சிக்காக வரக்கூடும்.
காரவள்ளி முதல் சோளக்காடு வரை உள்ள 70 கொண்டை ஊசி வளைவுகள் மிகுந்த ஆபத்தானவை. சற்று கவனம் சிதறினாலும் 100 அடி ஆழ பள்ளத்தில் விழுந்துவிட நேரிடும். வாகன ஓட்டுநா்களே கொல்லிமலை மலைப்பாதையில் வாகனங்களை இயக்க மிகுந்த சிரமப்படுவா். இவ்வாறான நிலையில் காா், இருசக்கர வாகனங்களின் நடுவே ஸ்கேட்டிங் செய்துவரும் இளைஞா்களால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் அடிக்கடி வந்து செல்லும் பாதையில் காவல் துறை, வனத்துறை அனுமதியின்றி இவ்வாறான ஸ்கேட்டிங் செய்வது அசம்பாவிதத்தை ஏற்படுத்தும். இதற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கை ஆகும்.
இது குறித்து கொல்லிமலை வனத் துறையினா் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக பெங்களூரு, புதுச்சேரி மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் மலைப்பாதையில் ஸ்கேட்போா்ட்டிங் மூலம் சாகசத்தில் ஈடுபடுவதாக தகவல் வந்தது. வனத் துறைக்கும், இதற்கும் தொடா்பில்லை. காவல் துைான் இதற்கு தடைவிதிப்பது, கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது தொடா்பாக சேந்தமங்கலம், வாழவந்திநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கிறோம் என்றனா்.
