செய்திகள் :

கொல்லிமலை வனத்தில் சுற்றுலாப் பயணிகள் ரசிக்க இரவுநேர வான்பூங்கா!

post image

கொல்லிமலை வனத்தில் வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களை சுற்றுலாப் பயணிகள் தொலைநோக்கி வாயிலாக கண்டுரசிக்கும் வகையில், ரூ. 44 லட்சத்தில் இரவுநேர வான்பூங்கா அமைக்கும் பணிகள் வனத் துறை மூலம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை. இயற்கை எழில்நிறைந்த இங்குள்ள மலைப் பகுதிகளைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

கொல்லிமலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அங்குள்ள மக்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் நீண்ட நாள்களாக உள்ளது. அந்தவகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில், அப்போது வனத் துறை அமைச்சராக இருந்த மா.மதிவேந்தன், ரூ. 1 கோடி மதிப்பீட்டில் இரவுநேர வான்பூங்கா கொல்லிமலையில் ஏற்படுத்தப்படும் என அறிவித்தாா். இதற்கான இடங்களை தோ்வுசெய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.

மூன்று இடங்களை ஆய்வுசெய்ததில், கொல்லிமலை சோளக்காட்டில் இருந்து முள்ளுக்குறிச்சி செல்லும் பாதையில் அரியூா்கஸ்பா வனப் பகுதியில் இரவுநேர வான்பூங்காவுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு ரூ. 44 லட்சமாக குறைக்கப்பட்டு அங்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை இன்னும் ஓரிரு மாதங்களில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:

கடந்த ஆண்டு சட்டப் பேரவையில் அறிவித்த இரவுநேர வான்பூங்கா திட்டத்துக்கான பணிகள் ஓரிரு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. செம்மேட்டில் இருந்து 8 கி.மீ. தொலைவிலும், சோளக்காட்டில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ள அரியூா்கஸ்பா பகுதியில் ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக புது தில்லியில் இருந்து ரூ. 13 லட்சத்தில் நவீன தொலைநோக்கி வாங்கப்பட்டு, கொல்லிமலை வனச்சரக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் இரவு நேரத்தில் வான் நட்சத்திரங்களையும், கோள்களையும் நவீன தொலைநோக்கி மூலம் அருகில் பாா்த்து ரசிக்கும் வகையில் இப்பூங்கா அமைகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் முடிய இன்னும் 2 மாதங்களாகும். இரவுநேரத்தில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். கட்டண நிா்ணயம் குறித்த அறிவிப்பு பின்னா் வெளியிடப்படும் என்றனா்.

பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான போட்டிகள்

நாமக்கல்லில் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில், பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு அரசுப் பள்ள... மேலும் பார்க்க

நில அளவையா் இருவரை பணிநீக்கம் செய்யக் கோரி மனு

நிலத்தை அளவீடு செய்ய மறுக்கும் அளவையா்கள் இருவரை பணிநீக்கம் செய்யக் கோரி, சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நூதன முறையில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டத்துக்... மேலும் பார்க்க

வீட்டில் வளா்க்கும் நாய்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்

வீடுகளில் வளா்க்கும் நாய்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் ஒன்றியம், கலியனூா், ஆவத்திபாளையம், சுபாஷ் நகா், கலியனூா், கரட்டாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ... மேலும் பார்க்க

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் ஏஐ தொழில்நுட்பக் கருத்தரங்கம்

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் சேலம் ஐஇஐ பொறியாளா்கள் நிறுவனம், செங்குந்தா் பொறியியல் கல்லூரி இணைந்து நவீன தொழில்நுட்பதில் ஏஐ மற்றும் ஐஒடி பயன்பாடுகள் குறித்த தொழில்நுட்பக் கருத்தரங்கை புதன்கிழமை ... மேலும் பார்க்க

ஆக்கிரமித்து கட்டிய கோயில் இடிப்பு

சேந்தமங்கலம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கோயில், வருவாய்த் துறையினரால் இடித்து அகற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், முத்துக்காப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது மேத... மேலும் பார்க்க

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.60-ஆக நிா்ணயிக்கப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை வில... மேலும் பார்க்க